மொழி என்றால் என்ன என்று புரியாமல் பலரும் பலவிதமான கற்பிதங்களில் சிக்கி விடுகின்றனர். இறைவன் அரபு மொழியில் பேசுவார் என்று சிலரும், இறைவன் லத்தீன் மொழியில் பேசுவார் இறைவன் நவமான பாசைகள் பேசுவார் என்று சிலரும் பலகாலமாக நம்பி வருகின்றனர். அது அவர்களின் நம்பிக்கை. ஏனென்றால் அவர்கள் கடவுள் என்பதை ஒரு நபராக கருதும் நம்பிக்கைகளை பின்பற்றுபவர்கள்.
சரி, எமது இந்து பாரம்பரிய நம்பிக்கை என்ன? இறைவன் என்ன மொழியில் பேசுவார்.
மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவி. இரண்டு தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே தமிழில் தொடர்பாட முடியும். இரண்டு அரபு மொழி தெரிந்தவர்கள் மட்டுமே அரபு மொழியில் தொடர்பாட முடியும். இந்த உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தமக்குள் தொடர்பாடல் செய்து கொண்டுதான் இருக்கின்றன.
நாம் வளர்க்கும் நாய் பூனை மாடு ஆடு முதலியவை கூட எம்முடன் ஏதோ ஒரு தொடர்பாடலை செய்து கொண்டுதான் உள்ளது. நாம் அவற்றுடன் என்ன பாசையில் பேசுகிறோம். தமிழ், ஆங்கிலம், சீனம் இவ்வாறான மொழிகளிலா பேசுகிறோம். இல்லை அல்லவா.. ஆனால் அவற்றுடன் நாம் தொடர்பாடலை செய்து கொண்டுதானே இருக்கிறோம்.
அதுபோலவே இறைவனும் எம்முடைய ஏதோ ஒரு வகையில் தொடர்பாடலை செய்துகொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இறைவன் எந்த மொழிக்கு உரியவர்? தமிழ்தான் இறைவனுக்கு தெரிந்த மொழியா? அரபிதான் இறைவனுக்கு தெரிந்த மொழியா? அந்த மொழி தெரிந்தவர்களுடன் மட்டுமே இறைவன் தொடர்பு கொள்வாரா?
அல்லது இறைவனும் உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரியும் அனைவருடனும் தொடர்பு கொள்வாரா? அப்படியானால் இறைவன் மனிதர்களுக்கு மட்டுமானவரா?
அப்படியானால் இந்த உலகின் உள்ள மற்றைய ஜீவராசிகள் எல்லாம் சில மதங்கள் சொல்வது போல மனிதர்களுக்காக படைக்கப்பட்டவையா?
இல்லை இறைவன் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உரியவர் என்றால் மானிட பாசையை விட மற்றைய ஜீவராசிகளின் பாசையை அறிவாரா? அவற்றுடன் அவற்றின் பாசைகளில்தான் தொடர்பு கொள்வாரா?
இந்துக்களால் மட்டுமே இவ்வாறு சிந்தித்து கேள்விகளை கேட்க முடியும். ஏனைய மதங்கள் என்றால் இறை நிந்தனை என்று கூறி கல்லால் எறிந்து கொன்றுவிடும்.
ஏனைய மதங்களைப் போல இந்துக்கள் கடவுளை நபராக கருதுவதில்லை. இறை என்பதை நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் அமைப்பு (system ) முறையாகவே கருதுகின்றனர். இறைவன் என்ற அந்த இருப்பிற்கு உள்ளேயே இந்த உலகங்கள், உயிர்கள் அனைத்தும் இருப்பதாக கருதுகின்றனர்.
உலகத்தின் அழிவு நாளில் வந்து பாவ புண்ணிய கணக்குப் பார்க்கும் ஒருவராக, தன் புகழ் பாடினால் 50- 100 பெண்களை கொடுத்து மதுவை ஆறாக ஓடவிட்டு போதையில் காமத்தில் திளைத்திருக்க சொல்லும் ஒருவராக கடவுளை கருதுவதில்லை. தன் புகழ் பாடினால் அவன் செய்யும் தவறுகளுக்கான பாவத்தையும் தன் புகழ் பாடாதவன் மேல் சுமத்தி நரகத்தில் வீழ்த்தும் ஆணவக்கரானாக கடவுளை கருதுவதில்லை.
கடவுள் என்பது ஒரு அமைப்பு முறை. அது யாருடனும் பேசும் தேவையோ, செயற்படும் தேவையோ இல்லாதது. அது மாயையை சாராதது. பேசுவதற்கு செயற்படுவதற்கு தேவையான மாய உடலும் மாய புலன்களும் அதற்கு கிடையாது. மாயை அற்ற தூய வடிவினை உடையவன் இறைவன் என்று நம்புபவர்கள் இந்துக்கள். அவன் ஞான வடிவினை உடையவன் மாயா உடலும் கரணங்களும் அற்றவன் என்று நம்புபவர்கள் இந்துக்கள்.
அதனால்தான் இறைவன் பேசுவதில்லை அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கிறான், நானும் அவனுடன் எதுவும் பேசுவதில்லை அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்று அந்நாளில் ஞானிகள் கூறியுள்ளார்கள்.
ஆம், இறைவன் பேசுவதில்லை. அது ஒரு மௌன நிலை. சப்தத்தால் மௌனத்தை உணர முடியாது. மௌன நிலையிலேயே மௌனத்தை உணர முடியும். அதனால்தான் மௌன நிலையில் இருந்து தியானிப்பதை இறைவனை உணரும் வழிமுறையாக இந்துக்கள் கொண்டுள்ளனர்.
இறைவனின் மொழி என்பது மௌனமே. அதை கேட்க முடியாது. உணர்ந்து கொள்ளவே முடியும். மனத்தை அடக்கி மௌன நிலையில் இருந்து இறைவனை தியானிப்பது ஒன்றே இறைவனின் மொழியை கிரகிப்பதற்கான ஒரே வழி.
சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது என்பது இறைவனுடன் உரையாடுவது கிடையாது. பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கு பொதுமைப்பாடான முறையில் பூசை வழிபாடுகளில் ஈடுபடும் முறையே சமஸ்தானத்தில் பூசை செய்வதும் அர்ச்சனை செய்வதும்.
இறைவனை நபராக கருதும், அவனுடன் உரையாடலாம் என்று நம்பும், உங்கள் அன்னிய மத சிந்தனைகளுடன் இந்துக்களின் வாழ்வியலைப் பொருத்திப் பார்க்காதீர்கள். உங்கள் தவறான சிந்தனைகளை திருப்திப்படுத்த இந்துக்களின் ஞானத்தால் முடியாது. நீங்கள் விரும்பினால் இந்துக்களின் ஆன்மீக ஞானத்தின் ஆழத்தை சற்று அறிந்து கொள்ளுங்கள்.
#சர்வம்_சிவமயம்