சித்தர்களின் உடற்கூற்று இரசாயனம் பற்றிய விளக்கம்.
மண்ணுடன் மண் சேர ஆவது எலும்பு .
மண்ணுடன் நீர் சேர ஆவது தசைகள் .
மண்ணுடன் நெருப்புச் சேர ஆவது தோல் .
மண்ணுடன் வாயு சேர ஆவது நரம்பு .
மண்ணுடன் ஆகாயம் சேர ஆவது ரோமம் .
நீருடன் மண் சேர ஆவது உமிழ் நீர் .
நீருடன் நீர் சேர ஆவது சிறுநீர் .
நீருடன் நெருப்புச் சேர ஆவது வியர்வை .
நீருடன் வாயு சேர ஆவது ரத்தம்
நீருடன் ஆகாயம் சேர ஆவது சுக்கிலம் /சுரோணிதம் .
நெருப்புடன் மண் சேர ஆவது பசி .
நெருப்புடன் நீர் சேர ஆவது தாகம் .
நெருப்புடன் நெருப்புச் சேர ஆவது நித்திரை .
நெருப்புடன் வாயுச் சேர ஆவது சோம்பல் .
நெருப்புடன் ஆகாயம் சேர ஆவது ஆண்பெண் சங்கமம் .
வாயுவுடன் மண் சேர ஆவது கிடத்தல் .
வாயுவுடன் நீர் சேர ஆவது நடத்தல் .
வாயுவுடன் நெருப்பு சேர ஆவது மடக்கல் .
வாயுவுடன் வாயு சேர ஆவது ஓடுதல் .
வாயுவுடன் ஆகாயம் சேர ஆவது குதித்தல் .
ஆகாயத்தில் மண் சேர ஆவது விருப்பு .
ஆகாயத்தில் நீர் சேர ஆவது வெறுப்பு .
ஆகாயத்தில் நெருப்புச் சேர ஆவது அச்சம் .
ஆகாயத்தில் வாயுச் சேர ஆவது வெட்கம் .
ஆகாயத்தில் ஆகாயம் சேர ஆவது மோகம் .
இதுதான் உடலின் ரசாயனம் !
இதுவரை உலகில் விஞ்ஞான அறிஞர்கள் கண்டது மொத்தம் நூற்றுப் பதினேழு மூலங்கள்(elements); ஆனால்
நம் மெய்ஞான சித்தர்களுக்கோ மொத்தம் எல்லாமே ஐந்துதான் .
ஆகாயம் ,
வாயு ,
நெருப்பு,
நீர் ,
மண்
இவையே பூதங்கள் ஐந்து
இவைகளையே மொத்த மூலங்கள் ஐந்துஎனக் கொண்டது சித்தர் அறிவியல் .
இவையே தனித்தும் இணைந்தும் ஆகின்றன உலகப்பொருட்கள் யாவையுமாய் அவைகளே ஆகின்றது அதுவே நமது மேனியுமாகவும் அமைகிறது
இந்த உடல்
இந்த உலகம்
இந்த பிரபஞ்சம் என அனைத்தும் பஞ்ச பூதங்களின் சேர்க்கைகளால் உருவானவையே..
இதனையே ஔவையார் தன் ஞானக்குறளில்
"பரமாய சக்தியுட் பஞ்சமா பூதத்
தரமாறிற் தோன்றும் பிறப்பு"
என்கிறார்.
பரம் = பரம் பொருளிடத்தில்
ஆய = உண்டான
சக்தியுள் = பராசக்தியிலடங்கிய
பஞ்சமாபூதம் = ஐந்து பெரிய பூதங்களும்
தரமாறிடில்= தங்களில் ஒன்றொன்று மாறினால் ,
பிறப்பு – இந்த ஜனனமானது
தோன்றும் = உண்டாகும் .
இந்த இரண்டடியில் எத்தனை பொருள் பொதிந்திருக்கிறது என்பது
வியப்பாக இருக்கிறது அல்லவா ?
சித்தர்களின் அத்தனை ஞானத்தையும் தன் இரண்டடிக் குறளில் எத்தனை விளக்கமாகக் கூறியிருக்கிறார்