Thursday, November 30, 2023

இறைவனின் மொழி எது?

மொழி என்றால் என்ன என்று புரியாமல் பலரும் பலவிதமான கற்பிதங்களில் சிக்கி விடுகின்றனர். இறைவன் அரபு மொழியில் பேசுவார் என்று சிலரும், இறைவன் லத்தீன் மொழியில் பேசுவார் இறைவன் நவமான பாசைகள் பேசுவார் என்று சிலரும் பலகாலமாக நம்பி வருகின்றனர். அது அவர்களின் நம்பிக்கை. ஏனென்றால் அவர்கள் கடவுள் என்பதை ஒரு நபராக கருதும் நம்பிக்கைகளை பின்பற்றுபவர்கள்.

சரி, எமது இந்து பாரம்பரிய நம்பிக்கை என்ன? இறைவன் என்ன மொழியில் பேசுவார்.

மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவி. இரண்டு தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே தமிழில் தொடர்பாட முடியும். இரண்டு அரபு மொழி தெரிந்தவர்கள் மட்டுமே அரபு மொழியில் தொடர்பாட முடியும். இந்த உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தமக்குள் தொடர்பாடல் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

நாம் வளர்க்கும் நாய் பூனை மாடு ஆடு முதலியவை கூட எம்முடன் ஏதோ ஒரு தொடர்பாடலை செய்து கொண்டுதான் உள்ளது. நாம் அவற்றுடன் என்ன பாசையில் பேசுகிறோம். தமிழ், ஆங்கிலம், சீனம் இவ்வாறான மொழிகளிலா பேசுகிறோம். இல்லை அல்லவா.. ஆனால் அவற்றுடன் நாம் தொடர்பாடலை செய்து கொண்டுதானே இருக்கிறோம்.

அதுபோலவே இறைவனும் எம்முடைய ஏதோ ஒரு வகையில் தொடர்பாடலை செய்துகொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இறைவன் எந்த மொழிக்கு உரியவர்? தமிழ்தான் இறைவனுக்கு தெரிந்த மொழியா? அரபிதான் இறைவனுக்கு தெரிந்த மொழியா? அந்த மொழி தெரிந்தவர்களுடன் மட்டுமே இறைவன் தொடர்பு கொள்வாரா?

அல்லது இறைவனும் உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரியும் அனைவருடனும் தொடர்பு கொள்வாரா? அப்படியானால் இறைவன் மனிதர்களுக்கு மட்டுமானவரா? 

அப்படியானால் இந்த உலகின் உள்ள மற்றைய ஜீவராசிகள் எல்லாம் சில மதங்கள் சொல்வது போல மனிதர்களுக்காக படைக்கப்பட்டவையா?

இல்லை இறைவன் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உரியவர் என்றால் மானிட பாசையை விட மற்றைய ஜீவராசிகளின் பாசையை அறிவாரா? அவற்றுடன் அவற்றின் பாசைகளில்தான் தொடர்பு கொள்வாரா?

இந்துக்களால் மட்டுமே இவ்வாறு சிந்தித்து கேள்விகளை கேட்க முடியும். ஏனைய மதங்கள் என்றால் இறை நிந்தனை என்று கூறி கல்லால் எறிந்து கொன்றுவிடும்.

ஏனைய மதங்களைப் போல இந்துக்கள் கடவுளை நபராக கருதுவதில்லை. இறை என்பதை நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் அமைப்பு (system ) முறையாகவே கருதுகின்றனர். இறைவன் என்ற அந்த இருப்பிற்கு உள்ளேயே இந்த உலகங்கள், உயிர்கள் அனைத்தும் இருப்பதாக கருதுகின்றனர்.

உலகத்தின் அழிவு நாளில் வந்து பாவ புண்ணிய கணக்குப் பார்க்கும் ஒருவராக, தன் புகழ் பாடினால் 50- 100 பெண்களை கொடுத்து மதுவை ஆறாக ஓடவிட்டு போதையில் காமத்தில் திளைத்திருக்க சொல்லும் ஒருவராக கடவுளை கருதுவதில்லை. தன் புகழ் பாடினால் அவன் செய்யும் தவறுகளுக்கான பாவத்தையும் தன் புகழ் பாடாதவன் மேல் சுமத்தி நரகத்தில் வீழ்த்தும் ஆணவக்கரானாக கடவுளை கருதுவதில்லை. 

கடவுள் என்பது ஒரு அமைப்பு முறை. அது யாருடனும் பேசும் தேவையோ, செயற்படும் தேவையோ இல்லாதது. அது மாயையை சாராதது. பேசுவதற்கு செயற்படுவதற்கு தேவையான மாய உடலும் மாய புலன்களும் அதற்கு கிடையாது. மாயை அற்ற தூய வடிவினை உடையவன் இறைவன் என்று நம்புபவர்கள் இந்துக்கள். அவன் ஞான வடிவினை உடையவன் மாயா உடலும் கரணங்களும் அற்றவன் என்று நம்புபவர்கள் இந்துக்கள்.

அதனால்தான் இறைவன் பேசுவதில்லை அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கிறான், நானும் அவனுடன் எதுவும் பேசுவதில்லை அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்று அந்நாளில் ஞானிகள் கூறியுள்ளார்கள்.

ஆம், இறைவன் பேசுவதில்லை. அது ஒரு மௌன நிலை. சப்தத்தால் மௌனத்தை உணர முடியாது. மௌன நிலையிலேயே மௌனத்தை உணர முடியும். அதனால்தான் மௌன நிலையில் இருந்து தியானிப்பதை இறைவனை உணரும் வழிமுறையாக இந்துக்கள் கொண்டுள்ளனர். 

இறைவனின் மொழி என்பது மௌனமே. அதை கேட்க முடியாது. உணர்ந்து கொள்ளவே முடியும். மனத்தை அடக்கி மௌன நிலையில் இருந்து இறைவனை தியானிப்பது ஒன்றே இறைவனின் மொழியை கிரகிப்பதற்கான ஒரே வழி.

சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது என்பது இறைவனுடன் உரையாடுவது கிடையாது. பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கு பொதுமைப்பாடான முறையில் பூசை வழிபாடுகளில் ஈடுபடும் முறையே சமஸ்தானத்தில் பூசை செய்வதும் அர்ச்சனை செய்வதும். 

இறைவனை நபராக கருதும், அவனுடன் உரையாடலாம் என்று நம்பும், உங்கள் அன்னிய மத சிந்தனைகளுடன் இந்துக்களின் வாழ்வியலைப் பொருத்திப் பார்க்காதீர்கள். உங்கள் தவறான சிந்தனைகளை திருப்திப்படுத்த இந்துக்களின் ஞானத்தால் முடியாது. நீங்கள் விரும்பினால் இந்துக்களின் ஆன்மீக ஞானத்தின் ஆழத்தை சற்று அறிந்து கொள்ளுங்கள்.

#சர்வம்_சிவமயம்



Tuesday, November 14, 2023

யார் இந்த சாளம்பன்? இலங்கை தமிழர்கள் என்பவர்கள் யார்?

இலங்கையில் பல ஊர்கள் சாளம்பன் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. 

சாளம்பன், மன்னார்
சாளம்பன், பூநகரி
சாளம்பன், ஒட்டுசுட்டான்
பெரிய சாளம்பன், ஒட்டுசுட்டான்
சாளம்பன் குளம், ஒட்டுசுட்டான்
சாளம்பன் தீவு, கச்சாய்
சாளம்பன் வில்லு, பூநகரி 
சாளம்பன், பாண்டியன்குளம்
சாளம்பன், பொறிக்கடவை(பரந்தன்)
சாளம்பன் குளம், வவுனியா
சாளம்பன், வவுனியா

இப்படி பல கிராமங்கள் இப்போதும் சாளம்பன் பெயரிலேயே இருக்கிறது. 

சாளம்பன் என்றால் யார்?

யார் இந்த சாளம்பன்? 

எதற்காக சாளம்பனின் பெயரை ஊர்கள் தோறும் வைத்திருக்கிறார்கள்.

சாளம்பன் என்பவன் காமரூப பேரரசை கைப்பற்றி ஆண்ட மிலேச்ச குல மன்னர்களில் ஒருவன்.

காமரூப பேரரசு என்பது இன்றைய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களையும் வங்காளம் பூட்டான் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு பழைய பேரரசு ஆகும்.

இந்த காமரூப பேரரசை மிலேசசர்கள் கைப்பற்றி ஆண்டுள்ளனர். பொ.ஆ 650-900 வரை மிலேச்ச குல அரசர்கள் ஆண்டதாக அவர்களது பதிவுகள் குறிக்கின்றது. அவ்வாறு ஆண்டவர்களை மிலேச்ச குல மன்னர்கள் என்றும் குறிப்பிடுகிறாரங்கள்.

இந்த மிலேச்ச குல மன்னர்களில் ஒருவனே இந்த சாளம்பன். சாளம்பனுக்கு முன்னர் அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் ஒருவனது பெயர் விஜயா(விஜயன்).

இன்று சாளம்பன் என்ற பெயர்களில் இருக்கும் ஊர்களில் உள்ள பழைமையான மக்கள் இந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த மக்களின் கலப்பு முகத்தோற்றத்தை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த காமரூப பேரரசை ஆண்ட மிலேச்ச குல அரசர்கள் தம்மை நரகாசுரன் வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த காமரூப பேரரசு இன்றைய அசாம் மாநிலத்தை மையமாக கொண்டு அமைந்திருந்தது. இலங்கை வரலாறும் விஜயன் லாலா நாட்டில் இருந்து வந்தவன் என்று கூறுகிறது. லால நாடு என்பதும் இந்த அசாம் பகுதியில் உள்ள ஒரு நாட்டையே குறிக்கும்.

விஜயன் இலங்கைக்கு வந்து ஆட்சிசெய்த பகுதியாக இன்றைய மன்னார் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளையே குறிப்பிடப்படுகிறது. அந்த பகுதிகளிலேயே அதிகளவான ஊர்கள் சாளம்பன் என்ற பெயரில் உள்ளது.

விஜய வம்சம் என்று குறிப்பிடப்படும் மக்கள் பலர் இலங்கை தமிழர்கள் என்று சொல்லப்படும் மக்களே. அசாமிய பாண்டிய கலப்பு இனமாகவே இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள். வேறு நாடுகளுக்கு சென்றால் இலங்கை தமிழர்கள் வங்காளிகளா என்ற கேள்வியை இன்றுவரை எதிர்நோக்கும் நிலையே காணப்படுகிறது. அதாவது வங்காளிகள் இலங்கை தமிழர்கள் இருவரும் ஒத்த தோற்றத்தை உடையவர்களாகவே உள்ளார்கள்.

(காமரூப அரசர்கள் நரகாசுரன் வம்சத்தினர் என்று அசாமியர்கள்தான் கூறுகின்றனர். காளிகா புராணத்திலும் நரகாசுரனை வதைத்த கதை வருகிறது. அதுவும் சக்தி வழிபாட்டின் வகைகளைப் பற்றி விவரிக்கும் புராணமாகும். நரகாசுரனை வதைத்தது காளிதேவியின் அம்சமாகும். இது பெண் தெய்வ வழிபாட்டு நிகழ்வாகவே இருக்கிறது.

வைணவ மயப்பட்ட நரகாசுரன் கதையில் கூட கிருஷ்ணன் வதைப்பதாக இல்லாமல் சத்தியபாமா என்ற பெண் அம்சமே வதைப்பதாக உள்ளது)






Sunday, November 12, 2023

யார் அந்த நரகாசுரன்? ஏன் இந்த தீபாவளி?

நர+கா+ சுரன் என்றால் மனிதர்களின் இருளில் உதித்தவன் என்று பொருள். நர என்றால் மனிதர் என்றும், கா என்றால் இருள் என்றும், சுரன் என்றால் உதித்தவன் என்றும் பொருள்.

இங்கே இருள் என்பது மனிதரின் இருள்மலமான ஆணவத்தை குறிக்கும். மனிதர்களின் ஆவணத்தில் இருந்து தோன்றியவன் இந்த நரகாசுரன். ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளே இந்த நரகாசுரன் என்ற தீயவன் இருக்கிறான். மனிதர்கள் அறிவு பெறும் போது அறியாமையால் உருவான நரகாசுரன் மறைந்து போகிறான்.

ஆணவம் என்பது அறியாமையால் தோன்றுவது. இங்கே அறிவு என்பது பள்ளிப் பாடமோ, பட்டப்படிப்போ கிடையாது. எது மனிதர்களது அஞ்ஞானத்தை- அறியாமையை போக்குகிறதோ, எது ஆணவத்தை நீக்குகிறதோ அதுதான் உண்மையில் அறிவு என்பது. பள்ளியில் பயில்வதும் கல்லூரியில் கற்பதும் அறிவு கிடையாது. அவை வெறும் தகவல் அறிதல்கள்.

இந்த தீபாவளி திருநாள் உருவான நரகாசுர வதம் செய்த கதையில் மாயவனான கண்ணனால் நரகாசுரனை வதம்செய்ய முடியாமல் சத்தியபாமாவே நரகாசுரனை வதம்செய்வார். அது ஏன்?

கண்ணன் என்ற மாயவன் மாயையின் உருவகம். மாயையே உயிர்களுக்கு ஆசைகளை உண்டுபண்ணி அறிவை மயக்குகிறது. மாயையிலேயே ஆணவம் உருவாக்குகிறது. எதனால் ஆணவம் உருவாகியதோ எதனில் ஆணவம் உருவாகியதோ அதனாலேயே ஆணவத்தை எப்படி அழிக்க முடியும்? அதனால்தான் மாயையின் துணையான சத்தியபாமா நரகாசுரனை அழிக்கிறார்.

மாயை ஆணவத்தை உருவாக்கினாலும் அந்த மாயை மெய்ப்பொருளில் நின்றே தோன்றுகிறது. மெய்ப்பொருளே மாயையாக உயிர்களுக்கு தோன்றுகிறது என்றும் கொள்ளலாம். அவ்வாறு மெய்பொருளில் நின்று தோன்றிய மாயைக்கு மெய்ப்பொருளே துணையாகவும் இருக்கிறது. அதனால்தான் மாயவனின் துணையை சத்திய பாமா என்கிறோம். சத்தியம் என்றால் உண்மை. மாயையின் துணையாக மாயையின் பின்னால் இருப்பது உண்மை. அதுதான் மெய்ப்பொருள்.

இங்கே நரகாசுரன் கதையில் மாயவனின் பின்னால் நின்று சத்தியபாமா நரகாசுரனை அழிக்கிறார். நாம் வாழ்வது மாயை சார்ந்த வாழ்வைத் தான். இந்த மாயையில் நின்றே நாம் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். நாம் கடவுளை வழிபடுவதும் மாயையில் நின்றே. கடவுள் எமக்கு உண்மையை உணர்த்துவதும் மாயையின் மூலமே. கடவுள் எம் அறியாமையை நீக்குவதும் மாயையில் நின்றே.

எம் எல்லோருக்குள்ளும் இருக்கும் நரகாசுரன் என்ற அறியாமையால் உருவான அரக்கனை அழிப்பதற்கு மெய்ப்பொருளாம் இறைவனது துணை வேண்டும். இறைவனின் அருளை மாயையை சார்ந்து நின்று வழிபடுவதன் மூலமே அடையமுடியும். இந்த ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் திருநாளே தீபாவளி திருநாள்.

எம்முள் இருக்கும் நரகாசுரன் கொல்லப்படும் போது அகஒளி பரவும். உண்மையை உணர்ந்து கொண்டாடுவோம்.

அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.



கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...