இலங்கையில் பல ஊர்கள் சாளம்பன் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது.
சாளம்பன், பூநகரி
சாளம்பன், ஒட்டுசுட்டான்
பெரிய சாளம்பன், ஒட்டுசுட்டான்
சாளம்பன் குளம், ஒட்டுசுட்டான்
சாளம்பன் தீவு, கச்சாய்
சாளம்பன் வில்லு, பூநகரி
சாளம்பன், பாண்டியன்குளம்
சாளம்பன், பொறிக்கடவை(பரந்தன்)
சாளம்பன் குளம், வவுனியா
சாளம்பன், வவுனியா
இப்படி பல கிராமங்கள் இப்போதும் சாளம்பன் பெயரிலேயே இருக்கிறது.
சாளம்பன் என்றால் யார்?
யார் இந்த சாளம்பன்?
எதற்காக சாளம்பனின் பெயரை ஊர்கள் தோறும் வைத்திருக்கிறார்கள்.
சாளம்பன் என்பவன் காமரூப பேரரசை கைப்பற்றி ஆண்ட மிலேச்ச குல மன்னர்களில் ஒருவன்.
காமரூப பேரரசு என்பது இன்றைய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களையும் வங்காளம் பூட்டான் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு பழைய பேரரசு ஆகும்.
இந்த காமரூப பேரரசை மிலேசசர்கள் கைப்பற்றி ஆண்டுள்ளனர். பொ.ஆ 650-900 வரை மிலேச்ச குல அரசர்கள் ஆண்டதாக அவர்களது பதிவுகள் குறிக்கின்றது. அவ்வாறு ஆண்டவர்களை மிலேச்ச குல மன்னர்கள் என்றும் குறிப்பிடுகிறாரங்கள்.
இந்த மிலேச்ச குல மன்னர்களில் ஒருவனே இந்த சாளம்பன். சாளம்பனுக்கு முன்னர் அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் ஒருவனது பெயர் விஜயா(விஜயன்).
இன்று சாளம்பன் என்ற பெயர்களில் இருக்கும் ஊர்களில் உள்ள பழைமையான மக்கள் இந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த மக்களின் கலப்பு முகத்தோற்றத்தை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.
இந்த காமரூப பேரரசை ஆண்ட மிலேச்ச குல அரசர்கள் தம்மை நரகாசுரன் வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த காமரூப பேரரசு இன்றைய அசாம் மாநிலத்தை மையமாக கொண்டு அமைந்திருந்தது. இலங்கை வரலாறும் விஜயன் லாலா நாட்டில் இருந்து வந்தவன் என்று கூறுகிறது. லால நாடு என்பதும் இந்த அசாம் பகுதியில் உள்ள ஒரு நாட்டையே குறிக்கும்.
விஜயன் இலங்கைக்கு வந்து ஆட்சிசெய்த பகுதியாக இன்றைய மன்னார் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளையே குறிப்பிடப்படுகிறது. அந்த பகுதிகளிலேயே அதிகளவான ஊர்கள் சாளம்பன் என்ற பெயரில் உள்ளது.
விஜய வம்சம் என்று குறிப்பிடப்படும் மக்கள் பலர் இலங்கை தமிழர்கள் என்று சொல்லப்படும் மக்களே. அசாமிய பாண்டிய கலப்பு இனமாகவே இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள். வேறு நாடுகளுக்கு சென்றால் இலங்கை தமிழர்கள் வங்காளிகளா என்ற கேள்வியை இன்றுவரை எதிர்நோக்கும் நிலையே காணப்படுகிறது. அதாவது வங்காளிகள் இலங்கை தமிழர்கள் இருவரும் ஒத்த தோற்றத்தை உடையவர்களாகவே உள்ளார்கள்.
(காமரூப அரசர்கள் நரகாசுரன் வம்சத்தினர் என்று அசாமியர்கள்தான் கூறுகின்றனர். காளிகா புராணத்திலும் நரகாசுரனை வதைத்த கதை வருகிறது. அதுவும் சக்தி வழிபாட்டின் வகைகளைப் பற்றி விவரிக்கும் புராணமாகும். நரகாசுரனை வதைத்தது காளிதேவியின் அம்சமாகும். இது பெண் தெய்வ வழிபாட்டு நிகழ்வாகவே இருக்கிறது.
வைணவ மயப்பட்ட நரகாசுரன் கதையில் கூட கிருஷ்ணன் வதைப்பதாக இல்லாமல் சத்தியபாமா என்ற பெண் அம்சமே வதைப்பதாக உள்ளது)
No comments:
Post a Comment