Thursday, June 1, 2023

உலகாயதம் /சாவகம்

சைவ சித்தாந்தம் வாதிகள் புறப்பறச் சமயம் என்று வகுக்கும் பிரிவுகளில் இதுவும் ஒன்று.

உலகாயதம், பொருள்முதல்வாதம், சாவகம், சார்வகம் என்ற பெயர்களால் இவர்கள் அடையாளப்படுத்தப் படுகிறார்கள்.

கடவுள் என்ற ஒன்று இல்லை என்றும் இந்த கண்ணால் காணும் உலகமும், அதில் உள்ளவையுமே உண்மை என்று இவர்கள் வாதிக்கிறார்கள்.

ஏனைய கடவுள் மறுப்பு வாதங்களைப் போலவே காட்சி அளவை என்ற ஒற்றை அளவை முறையை மட்டுமே இவர்களும் ஏற்கிறார்கள். கண்ணால் காண முடியவில்லை என்றால் அவ்வாறு ஒன்று இல்லை என்பது இவர்களது வாதம்.

இந்த உலகமும், உலக வாழ்க்கையுமே உண்மையானது என்றும் அதில் வாழ்வதற்காகவும் உலக இன்பங்களை அனுபவிப்பதற்காகவும் எதையும் செய்யலாம் என்பவர்கள் இவர்கள். வீடு பேறு/ பேரின்பம் என்று ஒன்று கிடையாது உலகத்தில் அனுபவிக்கும் இன்பமே உண்மையான இன்பம் என்பது இவர்களது வாதம். 

நியாயம், தர்மம், ஒழுக்கம் என்பவையெல்லாம் வாழ்வதற்கு தடையாகும் என்பது இவர்களது வாதம். "கடன்பட்டாவது நெய்யுணவு கொள்ளட்டும்" என்னும் வகையில் இவர்களது போதனைகள் இருந்துள்ளது. பகட்டான வாழ்க்கைக்காக கடன்படுவது, தவறான தொழில்கள் செய்வது கூட சரி என்று போதிக்கும் கூட்டம் இது. கோவலன் கதையில் தம் உடலை விற்று வாழும் மாதவியின் சமூகமும் இந்த உலகாயத மரபைப் பின்பற்றியவர்கள்தான். கடவுள், கர்மா எதுவுமில்லை என்று தவறுகளை ஊக்குவிக்கும் ஒரு கூட்டமாகவே இந்த கடவுள் மறுப்புக் கூட்டம் அன்றும் இருந்துள்ளது.

கடவுள் இல்லை, ஆன்மா இல்லை, கர்மா இல்லை, ஒழுக்கம் வரைமுறை எதுவும் இல்லை. இவற்றை எல்லாம் உருவாக்கியவர்கள் திருடர்கள், கோமாளிகள் என்பதாகவே இவர்களது வசைபாடல்கள் இருந்துள்ளது. இவர்கள் அறிவுபூர்வமான எந்த ஒரு வாதத்தையும் செய்தவர்கள் இல்லை, ஏற்றவர்களும் இல்லை. 

கடவுள், ஆன்மா, கர்மா ,ஒழுக்கம் என்று எதையும் கண்ணில் காட்டமுடியாது. எனவே அவ்வாறு ஒன்று இல்லை என்பது மட்டுமே இவர்களது வாத வழிமுறையாக இருந்துள்ளது.

சமூகத்தின் விளிம்புநிலை மக்கள், பிறழ் நடத்தையுள்ள மக்களை நோக்கியே இவர்களது முனைப்பு இருந்தது. தவறான வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. அவர்களும் தமது தவறான வாழ்க்கைக்கு கிடைக்கும் அங்கீகாரத்தால் இவர்களை ஆதரித்தனர்.

மக்களின் வாழ்வியல் ஒழுக்கம், சிந்தனைகள் எவற்றையும் மேம்படுத்த முனையாமல், அவர்களின் தவறுகளை ஊக்குவித்து அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு குழுமமாகவே இந்த சாவகர் கூட்டம் இருந்துள்ளது.

இன்று முற்போக்கு பகுத்தறிவு என்ற பெயரில் சமூகத்தில் ஒழுக்க சீர்கேடுகளை ஊக்குவிக்கும் கூட்டம் இந்த உலகாயத சிந்தனையின் நீட்சியே. இந்துக்களுக்கு எதிரான ஈவேராவின் பேச்சு, கருணாநிதியின் வசைபாடல் எவையும் அவர்களின் சொந்த சிந்தனையில் வந்த புதிய கருத்துக்கள் அல்ல, அவர்கள் இந்த உலகாயத சிந்தனையின் நிகழ்கால எச்சங்கள் மாத்திரமே.

#திராவிடம் #பெரியாரியம் #பகுத்தறிவு #கடவுள்மறுப்பு என்பது எல்லாம் இவர்களது நிகழ்கால அடையாளங்கள்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -22



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...