சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் புறச்சமயம் என்னும் வகைப்பாட்டில் வரும் ஒரு சமய பிரிவாகும்.
தர்க்கரீதியான முறையில் எந்தவொரு ஆன்மீக விடயத்தையும் அணுகுவதற்கான வழிமுறையை கொண்டவர்கள் இவர்கள்.
இவர்களிலும் இருவேறு உட்பிரிவினர் உள்ளனர்
விஷேசம் /வைஷேஷிகம்
என்பவையே அப்பிரிவுகளாகும்.
ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரித்து வேறுபடுத்தி அறிவதற்கு நியாயிக்கத்தக்க விடயங்கள் இருந்தால் அவை வேறுவேறு பொருட்கள் என்பது நியாயவாதிகளின் வாதம்.
ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்தி காட்டுவது அவற்றின் சிறப்பு தன்மைகளே என்றும், சிறப்புத் தன்மையை கொண்டே ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்தி அறியமுடியும் என்பதும் வைஷேசவாதிகளின் வாதம்.
நியாயம் விஷேசம் என்னும் இரண்டு தத்துவ வாதிகளும் தர்க்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டதால் பொதுவாக தர்க்கீகவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
கருதல் அளவை
ஒப்பீட்டு அளவை
உய்த்துணர்வு அளவை
என்னும் நான்கு அளவை வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிய வேறுபாட்டை அறிந்து கொள்ளலாம் என்று நியாயவாதிகள் கூறுகின்றனர்.
நியாய வாத பிரிவை கோதமர் என்பவரும், விசேஷ வாத பிரிவை கணாதரரும் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தர்க்க பிரிவினர் அறியாமைதான் மானுட துன்பங்களுக்கு காரணம் என்றும் மேற்குறித்த அளவை முறைகளில் அறிவை அடைவதன்மூலம் துன்பத்தில் இருந்து விடுபட முடியும் என்றும் கூறுகின்றனர்.
பிற்காலத்தில் ஆன்மீக அளவை முறைகள் வேறுபட்ட முறைகளைக் கைக்கொள்ள ஆரம்பித்தாலும், இன்றுவரை இவையே அளவை முறைகளின் அடிப்படையாக உள்ளது.
இன்று அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் முடிவுகள் என்று சொல்லப்படுபவை பலவும் இந்த முறைகளையே அடிப்படைய்கக் கொண்டுள்ளது.
சைவ சித்தாந்தம் முப்பொருள் உண்மை என்பதையும், சிவனது எண்குண தத்துவங்களையும் நிறுவுவதற்கு இந்த அளவை முறைகளையே பயன்படுத்தி உள்ளது.
தர்க்க வாதிகள் தர்க்க பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்பதால் பிரமாணவாதிகள் என்றும் அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
கருதல் அளவை
உவமை அளவை
ஆகமம்
அருத்தாபத்தி அளவை
இயல்பு அளவை
ஐதிக அளவை
அபாவ அளவை
மீட்சி அளவை
உண்டாம்நெறி அளவை
என்ற பத்து அளவை முறைகள் பிற்காலத்தில் சமயவாதிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சமய அறிவியல் மாற்றத்திற்கு தர்க்கவாதம் என்னும் சமயதத்துவம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -21
No comments:
Post a Comment