சௌத்திராந்திக பௌத்தம்
சைவ சித்தாந்த வாதிகள் புறப்புறச்சமயம் என்று வகுக்கும் சமய பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
ஹீனயான பௌத்த மதத்தின் உட்பிரிவைச் சேர்ந்தது இது. காட்சி அளவை என்ற ஒற்றை அளவை முறையை மட்டுமே ஏற்கும் சமய வாத பிரிவுகளில் ஒன்றாகும்.
இவர்கள் உலகம் முழுவதும் கணத்திற்கு கணம் மாறுவதை ஏற்கிறார்கள். இந்த உலகத்தில் எதுவும் நிலையாக இல்லை என்பதையும் ஏற்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு கணத்திலும், அந்த கணநேரத்தில் உள்ள காட்சி நிலைகள் உண்மையானது என்கிறார்கள். உலகில் நாம் காணும் எல்லாம் கணநேர உண்மைகள் என்பது இவர்களது வாதம்.
இவர்கள் பௌத்த மதத்தின் புனித நூலான திரிபிடகத்தை பின்பற்றியவர்கள் என்று அறியப்படுகிறார்கள்.
புத்தரின் போதனைகள், அவர் சொல்லிய மெய்யியல் தத்துவங்கள், அவர் காட்டிய வாழ்வியல் நடைமுறைகள் என்பவையே திரிபிடகம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த திரிபிடகத்தை பின்பற்றியவர்கள் ஹீனயான பௌத்த பிரிவு என்றும், புத்தரின் போதனைகளின் வழிநின்று புதிய சிந்தனைகள் தர்க்கங்களை உருவாக்கியவர்கள் மகாயான பௌத்தர்கள் என்றும் வழங்கப்படுகிறார்கள்.
புத்தரின் போதனைகள் நியாயப்படுத்துவதற்காகவே கணநேர உண்மைகள் என்ற வாதத்தை இவர்கள் முன்வைத்தார்கள். ஹீனயான பௌத்த பிரிவில் எழுந்த ஒரே ஒரு தர்க்க சிந்தனை இது என்று கூட சொல்லலாம்.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -23
No comments:
Post a Comment