Monday, June 5, 2023

வற்றாப்பளை கண்ணகை அம்மன்

நாளையே தினம்(05.06.2023 திங்கட்கிழமை) இலங்கையின் வடக்கே, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளை கண்ணகை ஆலயத்தில் வருடாந்திர பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

வருடா வருடம் வைகாசி மாத பௌர்ணமியை அடுத்த திங்கட்கிழமை இப்பொங்கல்விழா சிறப்பாக நடைபெறுகிறது. நாடெங்கிலும் இருந்து பலலட்சம் பக்தர்கள் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

இதே காலப்பகுதியில் நாடுமுழுவதும் பல கண்ணகை ஆலயங்களில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுகிறது. 

இந்த கண்ணகை வழிபாடு இலங்கையை ஆண்ட கஜபாகு மன்னனின் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது.

கண்ணகை என்பவள் சப்த கன்னியர்களில் ஒருவராகவும், பதினொரு உருத்திரைகளில் ஒருவராகவும், கண்ணகை அம்மன் புராணத்தில் பார்வதிதேவியின் அம்சமாகவும் போற்றி வணங்கப்படுகிறார்.

ஆயிரம் கண்களை உடையவள் என்று இந்திராணியின் வடிவமாகவும் அவள் வர்ணிக்கப்படுகிறாள். பேச்சி அம்மனை ஒத்து கிழவி, ஆச்சி என்று விழிக்கும் வழக்கமும் இங்கே உள்ளதுதான்.

இந்த கண்ணகை வழிபாடு எத்தனையாம் ஆண்டில் எங்கு தொடங்கியது என்று சரியாக குறிப்பிட முடியாது. ஆனால் இந்த கண்ணகையின் உருவினை ஒத்த அம்மன் சிலைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னராகவே உலகம் முழுவதும் இருந்துள்ளமை தொல்லியல் ஆய்வுகள் முலம் வெளிப்பட்டுள்ளது.

 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மொசப்பத்தேமியாலில் இஸ்தர் என்று வழிபடப்பட்ட மிகப்பெரிய பெண் தெய்வம் இந்த கண்ணகையின் உருவினை ஒத்தே காணப்படுகிறது. 

ஆதே காலப்பகுதியில் சுமேரியர்கள் வணங்கிய இன்னன்னை/ இன்னன்னா என்னும் பெண் தெய்வமும் இதே கண்ணகையின் உருவிலேயே காணப்படுகிறது.

பண்டைய எகிப்தின் பெண் ஆட்சியாளர்கள் கண்டகை என்றே அழைக்கின்றனர். இந்திய பாரம்பரியத்திலும் மகாராணியை தேவி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. அவர்கள் மகாராணியை கண்டகை என்று விழித்ததையும் அவ்வாறே கொள்ளலாம்.

சமண மதங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலத்திலும் கண்ணகை வழிபாடு என்பது சமூக ஆதிக்கம் மிகுந்த ஒன்றாகவே இருந்துள்ளது. கண்ணகையின் வழிபாட்டு முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவே அந்த காலத்தில் சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் எழுதப்பட்டுள்ளது. 

கண்ணகை என்பவள் கடவுள் அல்ல என்றும், அவள் ஒரு மானிட பெண் என்றும் நம்பவைப்பதற்கு அந்த சமண கதைகள் முயன்றுள்ளன. அதே காலப்பகுதியில் இன்றைய எத்தியோப்பியா முதல் பாகிஸ்தான் வரை எஸ்தர் என்ற பெயரில் பரவலாக வழிபடப்பட்ட கண்ணகையை மானிட பெண்ணாக சித்தரிக்கும் முயற்சியில் கிறித்தவ பைபிள் ஈடுபட்டுள்ளது.

தமிழ் மண்ணில் சிலப்பதிகாரம் என்ற சமண நூலும், மத்திய கிழக்கில் கிறித்தவ பைபிளும் ஒரே போன்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தது. கண்ணகையை மானிட பெண்ணாக மாற்றி தமது மதங்களின் நிலைக்கு தரந்தாழ்த்துவது ஒன்று, அதனூடாக அந்த வழிபாட்டின் சிறப்பை இல்லாமல் செய்வது என்பது இரண்டு. இதுவே இரண்டு கூட்டங்களினதும் வழிமுறையாக இருந்துள்ளது.

இவ்வாறான முயற்சிகளை எல்லாம் தாண்டி கண்ணகை வழிபாடு இலங்கையில் சிறப்பாக நடைபெறுகிறது. வழிபடும் பக்தர்கள் யாரும் இந்த சமண கதைகளையும் அந்த பாத்திரங்களையும் மனதில் கொள்வதில்லை. எல்லாம் வல்ல பராசக்தியின் வடிவமாகவே கண்ணகையை வழிபடுகிறார்கள்.

சூழ்ச்சிகள் ஒருபோதும் வெல்வதில்லை. 

சிறிய குணம் கொண்டவர்களின் சூழ்சிகளுக்குள் அவள் அடங்குவதில்லை. அவள் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் ஆதிபராசக்தியின் அம்சம்.

கண்ணகையை வழிபட்டு எம்மைச் சூழ்ந்திருக்கும் சூழ்ச்சியாளர்களை வெல்வோம்.

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை ஆலயத்தை நோக்கி எமது கால்களும் நடக்கட்டும்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -26







No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...