Tuesday, May 30, 2023

யோகசாரம் /சூன்யவாதம்

சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் புறப்புறச் சமயம் என்று வகுக்கப்படும் சமயப் பிரிவில் யோகசாரமும் ஒன்று. இது யோகசார பௌத்தம் என்று அறியப்படுகிறது.

இது மகாயான பௌத்த மத உட்பிரிவுகளில் ஒன்றாகும். 

நாம் காணும் காட்சிகள், இந்த உலகம், பிரபஞ்சம் எல்லாம் பொய் என்பதும், அவ்வாறு எதுவும் இல்லை என்பதும் யோகசார வாதிகளின் வாதம்.

புத்தியில் தோன்றும் காட்சி விரிவே உலகமாக, பிரபஞ்சமாக, உயிர்களாக என்று தோன்றுகின்றது. ஆனால் அவ்வாறு எதுவும் கிடையாது. எல்லாம் சூன்ய மயமாகவே உள்ளது என்பது இவர்களது வாதம்.

யோக நிலையில் உண்மை கிடைக்கும் என்பதையும், கடவுள் எமக்கு உள்ளேயே இருக்கிறார் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இவ்வாறு கூறுவதால் யோகசாரர் என்று அழைக்கப்படுகின்றனர். யோகத்தின் சாரமாக கிடைக்கும் முடிவு என்பது அதன் பொருள். 

தொடர்ச்சியாக செய்யப்படும் யோகத்தின் விளைவாக உள்ளே ஒரு வெறுமை மட்டுமே தோன்றுவதால் அதுதான் உண்மை நிலையென்று அவர்கள் வாதிக்கின்றனர். அதனால் அந்த சூன்ய நிலையே உண்மையானது என்றும் இந்த உலகில் நாம் காணும் காட்சிகள் அனைத்தும் புத்தியில் தோன்றும் காட்சிகளே அன்றி அவற்றில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்றும் வாதிக்கின்றனர்.

இந்த சமய பிரிவினர் கௌதம புத்தர் தோன்றிய ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் உருவாகிய ஒரு பிரிவினராவர். ஆனால் இதுதான் கௌதம புத்தர் உருவாக்கிய கோட்பாடு என்பது போன்ற தோற்றம் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் புத்தர் இவ்வாறான எந்தவொரு கோட்பாடுகளையும் முன்வைத்ததோ, ஆதரித்ததோ இல்லை.

அறியப்படாத விடயங்கள் தொடர்பில் எந்தவொரு கற்பனையான முடிவுகளும் தேவையற்றது என்பதே கௌதம புத்தரின் போதனையாக இருந்துள்ளது. 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -20



மத்யமிகம் /மாயாவாதம்

சைவ சித்தாந்த வாதிகள் புறப்புறச்சமயம் என்று வகுக்கும் ஆறு சமயங்களில் ஒன்று. 

பிரதான பௌத்த மதப்பிரிவுகளில் ஒன்றான மகாயான பௌத்த உட்பிரிவு வகைப்பாட்டில் வரும் 9 பிரிவுகளில் மத்யமிகமும் ஒன்று. 

புதிய சிந்தனை மாற்றங்கள், தர்க்கமுடிவுகள் என்பவற்றை ஏற்கும் புத்தரின் வழிமுறையை அடிப்படையைக் கொண்டது மகாயான பௌத்தம். 

உலகம் உண்மையானதோ, பொய்யானதோ அல்ல என்பதை அடிப்படையாகக் கொண்டது மத்யமிக சமயத்தின் வாதம்.

இந்த உலகமோ பிரபஞ்சமோ கண்ணில் தோன்றுவதால் அதுதான் உண்மை என்றும் கிடையாது, அது உண்மையானது இல்லை என்பதால் அவ்வாறு ஒன்று இல்லை அது பொய்யான தோற்றம் என்பதும் கிடையாது.

நாம் காணும் உலகத்தின் தோற்றம் உண்மை இல்லை என்றாலும் அதில் உண்மையான ஒரு பொருள் உள்ளது என்பது மத்யமிக சமயத்தின் வாதமாகும்.

உண்மையான ஒன்று வேறு ஒன்றாக தோன்றுவது மாயை எனப்படும். இந்த உலகம் அதில் காணும் பொருட்கள் அனைத்தும் உண்மையான பொருள் ஒன்றின் தோற்ற மாறுபாடுகளே. அந்த மாய நிலையைப் பற்றி பேசுவதால் இவர்கள் மாயாவாதிகள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

சைவ சித்தாந்த தத்துவங்கள் கூறும் சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் தத்துவங்களை இதனை ஒத்ததாகவே கருதவேண்டும். 

ஆதிசங்கரரும் இதனை ஒத்த கருத்தையே தனது வாதமாக முன்வைத்தார்.

இந்த உலகம் உண்மையானதோ பொய்யானதோ கிடையாது மாயை வடிவமானது என்ற மத்யமிக வாதத்தை முன் வைத்தவர் நாகார்ஜுனர் என்பவராவார்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -19



சாங்கியம் /பௌத்தம்

சைவ  சித்தாந்த வாதிகள் புறச்சமயம் என்று வகுக்கும் சமய பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். சமண மதங்கள் என்று குறிப்பிடப்படும் மதங்களில் ஒரு பிரிவினராவர். 

சாங்கியமரபில் வந்த கௌதமரை பின்பற்றுபவர்கள் என்பதால் சாங்கியம் என்று அழைக்கப்பட்டது. புத்தர் ஒருவரை பின்பற்றும் பிரிவினர் என்பதால் புத்தம்/ பௌத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

கடவுள் என்ற ஒற்றைக் கருத்தியலைத் தவிர சைவ சித்தாந்தம் கூறும் பல தத்துவ கோட்பாடுகள் சாங்கிய தத்துவங்களுடன் ஒத்துநிற்கிறது. கடவுள் ஆன்மா பற்றிய நிலைப்பாட்டை தவிர சிலபல சாங்கிய தத்துவங்களை சைவ சித்தாந்தம் ஏற்கிறது என்று கூட சொல்லலாம்.

அறிவுள்ள பொருள், அறிவற்ற பொருள் என்ற இரண்டினைப்பற்றியே சாங்கியம் பேசுகின்றது. புருடன், பிரகிருதி என்று அவற்றை சாங்கியம் குறிப்பிடுகிறது. 

புருடன் என்னும் அறிவுப்பொருள் மாற்றம் அடையாதது. அது உலகத்தின் தோற்றத்திற்கு காரணம் கிடையாது, பிரகிருதியே அனைத்தும் தோன்றுவதற்கு காரணம் என்கிறது சாங்கியம். பிரகிருதியே அனைத்தும் தோன்றுவதற்கான மூலப்பொருளாகும் என்று சாங்கியம் பேசுகின்றது.

புருடன், பிரகிருதி என்ற இரண்டும் சேர்ந்ததே இந்த பிரபஞ்சம் முழுவதும் என்றும், இவற்றை கடந்த அறியாத ஒன்றைப் பற்றிய விவாதங்கள் தேவையற்றது என்பதும் சாங்கியத்தின் நிலைப்பாடாகும். 

இருப்பது அழியாது, இல்லாதது தோன்றாது என்ற சைவ சித்தாந்தம் கூறும் சற்காரிய வாதத்தினையும் சாங்கியம் பேசுகின்றது.

ஆணவம் தான் அனைத்து செயல்களுக்கும் காரணம், ஆணவத்தால் செய்யும் செயல்கள் தான் அந்த செயலைச் செய்யும் உயிர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு காரணம் என்பது சைவ சித்தாந்தம். சாங்கியமும் ஆசைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று கூறுகிறது.

ஆணவம் என்பதும், ஆசை என்பதும் உயிர்களிடம் உண்டாகும் விருப்பத் தூண்டல்களே.

அறிவுள்ள பொருள், அறிவற்ற பொருள் என்ற இரண்டு மட்டுமே உள்ளது என்பதையும், அறிவுள்ள பொருள் மாற்றம் அடைவதில்லை என்பதையும் வைத்து பல தர்க்கங்களை சாங்கியத்தால் விளக்க முடியாமல் தோற்றுப்போகிறது. 

அறிவுள்ள பொருள் மாற்றம் அடைவதில்லை எனில், அறிவற்ற பொருள் எவ்வாறு செயற்படும் என்பதை விளக்க முடியாது. செயல் என்பதே ஒரு நிலைமாற்றம்தான். ஒரு செயலைச் செய்வதற்கு அறிவு தேவை, அந்த அறிவற்ற பொருள் தனித்து நின்று செயற்பட முடியாது. அறிவற்ற சடப்பொருள் அறிவைப் பெற முடியாது. அறிவுள்ள பொருளில் இருந்து அறிவைப் பெறுவது என்றாலும் அந்த அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான அறிவு வேண்டும். ஆக அறிவற்ற பொருள் என்று ஒன்று இல்லாமல் போய்விடும்.

ஒரு செயலைச் செய்வதற்கு அறிவு மூலப்பொருள் என்ற இரண்டு மட்டுமே போதாது. அந்த செயலைச் செய்வதற்கான ஆற்றலும் வேண்டும். 

அதனால்தான் சைவசித்தாந்தம் அறிவு ஆற்றல் என்பவற்றை முடிவிலியாகக்கொண்ட ஒரு பேரின்ப அருள்நிலை இருப்பு உண்டு என்றும் அதுதான் கடவுள் என்றும், 

அந்த கடவுளின் பேரிருப்பில் இருந்து அறிவை ஆற்றலைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று உண்டென்றும் அதுதான் உயிர்கள் என்றும்,

அவை இரண்டையும் நீங்கிய ஜடமூலப்பொருள் ஒன்று உண்டென்றும் அதுவே மாயையாக பலவாறாக தோன்றி நிற்கிறது என்றும் விளக்குகிறது. 

இந்த உலகத்தில் உள்ள பிரகிருதி பொருட்களின் இருப்பை உண்மை என்னும் சாங்கியத்தின் வாதத்தை சைவ சித்தாந்தம் நிராகரிக்கிறது. இவை மாயையால் ஆனவை என்றும் அவை எதுவும் உண்மை கிடையாது என்றும் சைவ சித்தாந்தம் விளக்குகிறது.

அறிவின் முழுமையான புத்தி நிலையை உணர்ந்தவர்கள் புத்தர்கள் என்பதும், அவ்வாறு புத்தர்களாக வாழ்ந்தவர்களை வழிபடுவதும் சாங்கிய மரபாக உள்ளது. இன்று பௌத்தம் என்று அறியப்படும் மதத்தின் தீர்த்தங்கரராக போற்றப்படும் கௌதம புத்தர் அந்த மரபின் 24 வது தீர்த்தங்கரர் என்று கருதப்படுகிறார்.

இன்று பௌத்தர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் பலரும் தீர்த்தங்கரர் என்பதைக் கடந்து, இந்து சமயங்கள் கடவுள் என்றும் கடவுளின் அம்சங்கள் என்றும் கூறுபவற்றையும் வணங்கும் இந்துக்களாகவே வாழ்கின்றனர்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -18



Saturday, May 27, 2023

மாயவனும் பசுக்களும்

மாயவனான கண்ணன் புல்லாங்குழல் வாசிப்பான் என்றும் அவனது புல்லாங்குழல் இசையில் மயங்கி பசுக்கள் கூட்டம் அவனை சூழ்ந்து நிற்கும் என்றும் புராண கதைகளில் சொல்லப்படுகிறது அல்லவா?

ஏன் மாயவனின் புல்லாங்குழல் இசையில் மயங்கி பசுக்கள் மட்டும்தான் சூழ்ந்து நிற்குமா? காளை மாடுகள் நிற்காதா? இல்லை ஆடு, நாய், பூனை என்பவை மயங்கி ரசிக்காதா? இவ்வாறு எப்போதாவது தோன்றியிருக்கிறதா?

இங்கு பசுக்கள் கூட்டம் என்பது மாடுகள் கிடையாது. ஆன்மாக்கள் கூட்டம் என்பதே அதன் பொருள். பசு என்றால் ஆன்மா. மாயையை உண்டாக்கி, அதில் ஜாலங்கள் செய்து ஆன்மாக்களை அதை நோக்கி ஈர்ப்பவனே மாயவன். மாயவன் என்றால் மாயைக்கு உரியவன். இந்த மாயையாக தோன்றிநிற்கும் அனைத்திற்கும் உரியவன் அவன். இந்த உலகில் உள்ள ஆன்மாக்கள் அனைத்தும் மாயையைப் பற்றியே நிற்கின்றன.

ஆன்மாவை மாயை தூண்டும் அதுதான் மாயவனின் புல்லாங்குழல் இசை. அந்த இசையின் மயக்கத்தில் ஆன்மாக்கள் கட்டுண்டு கிடக்கும் அதுதான் ஆணவம்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் நடக்கும் செயல்களுக்கு நானே காரணம் என்கிறான் மாயவன். அது உண்மைதானே? மாயை இல்லாமல் செயல்கள் ஏது? மாயையில் உண்டாக்கும் மாற்றங்கள் தானே செயல்கள். மாயவனின் இருப்பைக் கடந்து எந்த ஒரு செயலும் கிடையாது. 

மாயவனின் இருப்பைக் கடந்துவிட்டால் அது மாயை அற்ற, செயல்கள் ஏதுமற்ற பெருவெளி. அந்த தூய்மையான நிலையைத்தான் சிவம் என்பர் சித்தர்கள். அது கர்மங்கள் ஏதுமற்ற பேரின்பமும், பேரமைதியும் உள்ள நிலையான இருப்பிடம்.

மாயவனின் இருப்பில் சிவம் இல்லையா? சிவத்தின் இருப்பில் மாயவன் இல்லையா? என்று தோன்றலாம். 

மாயவனின் மாயை சார் பிரபஞ்ச இருப்பில் சிவம் என்பது மறைபொருள். மாயையை நீக்கினால் சிவம் தோன்றும்.

மாயையைக் கடந்த சிவப்பெரும் வெளியில் மாயவன் மறைபொருள். அங்கே மாயவனும் தூய நிலையில் தோன்றா மாயையாய் சுத்தமாயை என்னும் நிலையில் இருப்பான். 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -17



பாடாணவாத சைவம்

சைவ சித்தாந்த வாதிகள் அகச் சமயம் என்று வகுக்கும் ஆறு சமய பிரிவுகளில் பாடாணவாத சைவமும் ஒன்று.

கடவுள் ஆன்மா மலங்கள் என்னும் முப்பொருட்களில் ஆன்மாவை மலங்கள் பற்றி நிற்கும் என்பதும் முக்தி நிலையை அடையும் ஆன்மாக்கள் மலங்களில் இருந்து விடுபடும் என்பதும் ஏனைய அகச் சமயங்களின் வாதம். 

ஆனால் முக்தி அடையும்போதும் ஆன்மாக்கள் கன்மம் மாயை என்னும் மலங்களில் இருந்தே நீங்கும், ஆணவத்தை விட்டு நீங்காது என்பது பாடாணவாதிகளின் வாதம்.

மாயை என்பது சடப்பொருள். சுத்த மாயை என்பது சடப்பொருட்களின் மூலம். ஆன்மா மாயையில் உண்டாக்கும் மாற்றங்களே கர்மம். 

ஆன்மா மாயையை சாராது நீங்கும் போது கர்மத்தில் இருந்து விடுபடும். 

இயல்புநிலையில் கடவுள், ஆன்மா என்பவை தனித்திருக்கலாம். மாயை சுத்த மாயை என்னும் நிலையில் தனித்திருக்கலாம். மாயை ஆன்மா என்பவை தனித்திருக்கும் போது கர்மம் என்பது இல்லாமல் போய்விடலாம். ஆனால் ஆணவம் என்பது ஆன்மாக்கள் சார்ந்து இருக்கும். முக்தி நிலையில் அது உறங்கு நிலையிலிருக்கலாம் ஆனால் ஆன்மாவை விட்டு நீங்காது என்பது பாடாணவாதிகளின் வாதம்.

சைவ சித்தாந்தம் அந்த வாதத்தை மறுக்கிறது. ஆணவம் என்பது ஆன்மாவில் இருப்பது கிடையாது. ஆணவம் என்பது ஆன்மாவின் விருப்பம் கிடையாது, ஆன்மா மீது மாயை உண்டாகும் விருப்பத் தூண்டலே ஆணவம். 

மாயை ஆன்மாவை தூண்டும். அந்த ஆணவத் தூண்டலின் விளைவே கர்மம். கர்மம் என்பது ஆணவத்தின் தூண்டலால் மாயையில் உண்டாக்கும் மாற்றம். 

ஆன்மாக்கள் அஞ்ஞான நிலையில் மாயையின் விருப்பத் தூண்டலுக்கு உட்பட்டு, ஆணவத்தின் பிடியில் சிக்குண்டு நிற்கிறது என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -16



Wednesday, May 24, 2023

வீரசைவம் எனப்படும் ஐக்கியவாதம்

முப்பொருள் உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் ஆனால் அதன் உட்பகுப்பில் மாறுபட்டு நிற்கும் ஒரு சமய பிரிவாகும். அகப்புறச் சமயம் என்று ஐக்கிய வாதசைவத்தை சித்தாந்த வாதிகள் வகுத்துள்ளனர்.

இவர்கள் முப்பொருள் உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் மும்மலங்கள் என்பதில் வேறுபட்டு நிற்கின்றனர். ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களில் ஆணவமலம் என்ற ஒன்று இல்லை என்பதும், கன்மம் மாயை எனும் இரண்டு மலங்கள் மட்டுமே உள்ளது என்பதும் இவர்களது வாதம். 

உயிர்களுக்கு அவை முற்பிறவியில் செய்த வினைப்பயன்களுக்கு ஏற்றவாறு கடவுளே பிறவிகளை அளிக்கிறார் என்பதும், உயிர்களது இன்ப துன்பங்களுக்கு அதுதான் காரணம் என்பதும் இவர்களது வாதம்.

கடவுள் அருளால் உயிர்கள் தமது வினைப்பயன் களில் இருந்து நீங்கும் என்றும், அவ்வாறு கடவுள் அருளால் வினைப்பயன்களில் இருந்து நீங்கிய உயிர்களை மீளவும் மலங்கள் பற்றாது என்பதும் இவர்களது நம்பிக்கை. 

சைவ சித்தாந்தம் கூறும் கடவுளின் தன்மைகளுக்கு இவை ஒவ்வாத சிந்தனைகள் என்பதால் சித்தாந்தவாதிகள் இந்த வாதங்களை மறுதலிக்கிறார்கள். 

இறைவன் உயிர்களுக்கு பிறவிகளை அளிப்பார் என்பது அடிப்படையான ஆன்மீக சிந்தனைக்கு எதிரானது என்று சித்தாந்த வாதிகள் கூறுகின்றனர்.

நல்வினை தீவினைதான் உயிர்களின் பிறவிகளுக்கும் காரணம். ஆனால் அதன் அடிப்படையில் இறைவன்தான் உயிர்களுக்கு பிறவிகளை அளிக்கிறார் என்றால், 

அந்த உயிரின் முதற் பிறவியில் எவ்வாறு தீவினை தோன்றியது? 

உயிர்களுக்கு முதலில் பிறவியை அளிக்க கடவுளுக்கு என்ன அவசியம்?

எந்த தீவினைப் பயனும் இல்லாமல் முதற்பிறவியை எடுத்த உயிர் தீவினைகளை நோக்கி நகர்வதற்கு ஏது காரணம்? 

கடவுளால் அளிக்கப்பட்ட முதற்பிறவியில் அவ்வுயிரை தீவினைகளை நோக்கி வழிகெடுப்பது எது? அது கடவுளைவிட வல்லமை உள்ளதா?

என்ற சித்தாந்த வாதிகளின் கேள்விகள் வீரசைவத்தின் கோட்பாடுகளை நிராகரிக்கின்றது.

இந்த வீரசைவ சமயத்தினர் பல்தெய்வ வழிபாட்டையும், உருவ வழிபாட்டையும் மறுக்கின்றனர். ஆலய வழிபாடு, ஆலய பூசைகள் என்பவற்றையும் மறுக்கின்றனர். இறைவனின் குறியீடாக கழுத்தில் அணியும் லிங்கத்தை மட்டும் தினமும் பூஜை செய்கின்றனர். இவர்கள் ஏதாவது ஒரு வீரசைவ மடத்தின் அங்கத்தவராக இருக்கின்றனர். இவர்கள் இறந்தவர்களை குழிக்குள் புதைக்கின்றனர். அதன் மேல் சிவலிங்கம் நந்தி என்பவற்றை பிரதிஷ்டை செய்கின்றனர்.

இவர்களது நம்பிக்கைகள் வழிமுறைகள் அனைத்தும் பெரும்பாலும் பாலைவன மதங்களை ஒத்ததாக இருக்கிறது.

அறிவிற்கும் தர்க்கத்திற்கும் பொருந்தாத வீரசைவ நடைமுறைகளால் மக்கள் அதனில் இருந்து விலகிவிட்டார்கள். இன்று வீரசைவர்கள் என்று பெயரளவில் சொல்லப்படுபவர்கள் பல்தெய்வ வழிபாட்டையும், ஆலய வழிபாட்டையும் ஏற்றவர்களாகவே உள்ளார்கள். 

வீரசைவத்தில் இருந்து பிற்காலத்தில் உருவான சீர்திருத்த பிரிவான லிங்காயத்து பிரிவினர் சாதிய பாகுபாடுகளை பார்ப்பதில்லை என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் பிரிவினரை மட்டும் ஒரே சாதியாக பார்க்கின்றனரே அன்றி எல்லோரையும் சமமாக பார்ப்பதில்லை. குழந்தைபிறப்பு, மரணம், பெண்பூப்படைதல், தவறான நடததையுடையவர்கள் என்போரது நெருக்கம் தீட்டு அல்ல என்பதும் இவர்களது நம்பிக்கை. இவையும் பாலைவன மதங்களை ஒத்ததாகவே காணப்படுகிறது.


சைவத்திற்குள் ஒரு சகாரா?

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -15



சிவசமவாதம் மற்றும் பேதவாதம்

சைவ சித்தாந்த தத்துவ பிரிவினர் அகச்சமயம் என்று வரையறை செய்யும் பிரிவுகளோ சிவசமவாதம் மற்றும் பேதவாதம் என்னும் பிரிவினராவர்.

கடவுள் ஆன்மா மலங்கள் என்னும் முப்பொருளும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் இப்பிரிவினர்கள் ஆன்மாவின் முக்தி இயல்பில் வேறுபட்டு நிற்கின்றனர்.

ஆன்மா தனது முக்தி நிலையில் இறைவனாகிய சிவனை ஒத்த இயல்பில் இருக்கும் என்பது சிவசமவாத சமயத்தினரின் வாதமாகும். முக்தி அடைந்த ஆன்மாக்கள் சிவதத்துவங்கள் கூறும் சிவனின் இயல்புகளை பெற்று சிவபோகத்தை முழுமையாக அனுபவிக்கும் என்று சிவசமவாத சமயத்தினர் கூறுகின்றனர்.

முக்தி நிலையை அடைந்தாலும் ஆன்மாக்கள் சிவதத்துவங்கள் கூறும் சிவனது நிலையை அடையாது என்பது பேதவாத சமயத்தினரின் வாதம். ஆன்மாவின் இயல்புகள் வேறு, சிவனின் இயல்புகள் வேறு என்றும், ஆன்மா முக்திநிலையை அடைந்தால் சிவ போகத்தை நுகர்வதற்கான தடைகள் நீங்கி நிற்குமேயன்றி சிவ இயல்பை, சிவபோகத்தை முழுவதும் பெற முடியாது என்று பேதவாத சமயத்தினர் கூறுகின்றனர்.

அன்று கடவுள் யார் என்பது சமயங்களின் வாதமாக இருக்கவில்லை, கடவுள் என்பதன் இயல்புகள் எவ்வாறானவை, ஆன்மா என்பதன் இயல்புகள் எவ்வாறானவை என்பதும் ஆன்மா தனது முக்திநிலையின் பின் எவ்வாறான இயல்பில் இருக்கும் என்பதுமே சமய பிரிவுகளின் வேறுபாடாக இருந்துள்ளது.

கடவுளை நபர் என்பதாக கருதும் அறியாமை இம்மண்ணில் இருந்ததில்லை. இன்ன பெயரில் இன்ன வடிவில் இன்ன முறையில் வணங்கினால் அது ஒரு மதம் என்பது ஆன்மீகம் என்றால் என்னவென்றே அறியாத அறிவிலிகள் கூட்டம் எம்மிடையே உருவாக்கிய குழப்பம்.

நாம் அனைவரும் எம் ஆன்மீக மரபுகளை அறிந்துகொள்வோம்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம்-14



25 சமயங்கள்

சைவ சித்தாந்தவாதிகள் சமயங்களை அகச்சமயம், புறச்சமயம் என்று இரண்டு வகையாகப் பகுத்துக் கூறுகின்றனர்.

பின் அவற்றை மேலும் பகுத்து

புறப்புற சமயம்
புறச் சமயம்
அகப்புற சமயம்
அகச் சமயம் 

என்று நான்கு பிரிவாக வகைப்படுத்துகின்றனர்

புறப்புறச்சமயம்

கடவுள் என்ற ஒன்று தனித்து இல்லை என்னும் சமயங்கள் புறப்புற சமயங்கள் எனப்படும். 

அறிவுள்ள உயிர் பொருள், அறிவற்ற சடப்பொருள் என்னும் இரண்டு மட்டுமே உள்ளது என்பதும், கடவுள் என்ற ஒன்று இருக்கும் என்றால் அது அறிவுள்ள உயிர்ப்பொருள்தான் என்பதும் இவர்களது வாதம். 

புறச்சமயம்

உயிர்கள், உயிரற்ற பொருட்கள் இரண்டுமே கடவுளின் வடிவங்கள் தான் என்னும் சமயங்கள் புறச்சமயங்கள் எனப்படும்.

கடவுளே உயிர்களாகவும், உயிரற்ற பொருட்களாகவும் தோன்றி நிற்கிறார் என்பதும், கடவுள் உயிர்களாகவோ உயிரற்ற பொருட்கள்கவோ தோன்றி உயிர்களுக்கு உதவுவார் என்பதும் இவர்களது வாதம்.

அகப்புறச்சமயம்

கடவுள், உயிர்கள், உயிரற்ற பொருட்கள் என்ற மூன்றும் தனித்தனியானவை என்றும், கடவுள் உயிர்களுடனும், உயிரற்ற பொருட்களுடனும் சார்ந்து நிற்பார் என்றும் கூறும் சமயங்கள் அகப்புறச் சமயங்கள் எனப்படும்.

கடவுள் உயிர்களின் இன்ப துன்பங்களில் தலையீடு செய்வார், துன்பங்களை நீக்குவதற்கு உதவுவார் என்பது இவர்களது வாதம்.

அகச்சமயம்

கடவுள், உயிர்கள், உயிரற்ற பொருட்கள் என்னும் மூன்றும் தனித்தனியானவை என்றும், உயிர்களானது கடவுள், உயிரற்றபொருட்கள் என்பவற்றை சார்ந்திருக்கும் என்றும், கடவுள் உயிர்களையோ உயிரற்ற பொருட்களையோ சார்ந்திருப்பதில்லை என்றும் கூறும் சமயங்கள் அகச்சமயங்கள் எனப்படும்.

கடவுள், உயிர்கள், உயிரற்ற பொருட்கள் என்னும் மூன்றும் நிலையானவை, அனாதியானவை என்பதும் அவை யாராலும் படைக்கப்படவில்லை என்பதும் இவர்களது வாதம்.

**அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஆன்மீக கலைச்சொற்களை தவிர்த்து புழங்கு சொற்களை பயன்படுத்தி உள்ளேன். குற்றம் பொறுத்தருள்க.


சைவ சித்தாந்த வாதிகளின் சமய வகைப்பாட்டில் சித்தாந்த சைவம் தவிர்த்த 24 சமயங்கள்.

புறப்புறச்சமயங்கள்

  • உலகாயதம் (பொருள் முதல்வாதம்) 
  • சௌத்திராந்திக பௌத்தம் 
  • வைபாடிக பௌத்தம் 
  • யோகாசார பௌத்தம் 
  • மாத்தியமிக பௌத்தம் 
  • ஆருகதம் 


புறச்சமயங்கள்
  • தருக்கம் (வைசேடிகம், நையாயிகம் என இருபிரிவு) 
  • மீமாஞ்சை  
  • ஏகான்மவாதம் 
  • சாங்கியம் 
  • யோகம் 
  • பாஞ்சராத்திரம் (வைணவம்)
அகப்புறசமயம்
  • பாசுபதம்
  • மாவிரதம்
  • காபாலம்
  • வாமம்
  • பைரவம்
  • ஐக்கியவாத சைவம்
அகச்சமயம்
  • பாடாணவாத சைவம்
  • பேதவாத சைவம்
  • சிவசமவாத சைவம்
  • சிவசங்கிராந்தவாத சைவம்
  • ஈசுவர அவிகாரவாத சைவம்
  • சிவாத்துவித சைவம்

இந்த சமய பிரிவுகள் இன்றும் அதே கோட்பாட்டில், அதே வாதத்தில் உள்ளதா என்பது ஆய்வுக்குரியது.

#சர்வம்_சிவமயம்

#ஆன்மீகம்_அறிவோம்-13



Sunday, May 21, 2023

பைரவம்

 சித்தாந்த சைவம் குறிப்பிடும் 24 சமய பிரிவுகளில், அகப்புறச்சமயம் எனும் வகைப்பாட்டில் வரும் ஆறு சமயங்களில் ஒன்றாகும். 

பைரவரை வழிபடும் இப்பிரிவினர் பைரவரை சிவனின் அம்சமாக, சிவனின் புதல்வனாக என்று வழிபடுகின்றனர். 64 பைரவர்கள், அட்ட பைரவர்கள் என்று பலவிதமாக பைரவரை வழிபடும் இப்பிரிவினர் பலியிடுதல், வேள்வி செய்தல் என்பவற்றையும் வழிபாட்டு முறையாக கொண்டவர்கள்.

பைரவ சமயத்தினர் தங்களை சைவர்கள் என்று கூறினாலும், சைவத்தின் சித்தாந்த பிரிவினர் அவர்களை நிராகரிக்கின்றனர்.

சிவனை கர்த்தாவாக, செயல்களை செய்பவராக பைரவ சமயத்தினர் நம்புகின்றனர். படைத்தல் காத்தல் அழித்தல் என்று எல்லா செயல்களும் சிவனின் மூர்த்தங்களால் மேற்கொள்ளப்படும் என்று பைரவ சமயத்தினர் கூறுகின்றனர்.

பைரவர்கள் சிவனே கடவுள் என்று ஏற்றாலும், சிவன் பலவாறாக தோன்றுவார் என்றும், செயல்களை ஆற்றுவார் என்றும் கூறுவதை நிராகரிக்கும் சித்தாந்த பிரிவினர், அதனால் அவர்கள் புறக்கணிக்கத்தக்க சிந்தனைகளை உடைய சிவனை கடவுளாக ஏற்ற சமயிகள் என்று அகப்புறச் சமயிகளாக குறிப்பிடுகிறார்கள்.

இலங்கையில் வடக்கே உள்ள தமிழர்கள் பலர் இந்த பைரவ சமயத்தினராகவே உள்ளார்கள். தமிழர் பகுதிகளில் குறிப்பாக யாழ்ப்பாண பகுதிகளில் அதிகளவான பைரவர் ஆலயங்கள் உள்ளன. எண்ணற்ற பைரவர் ஆலயங்கள் இருக்கும் யாழ்ப்பாண மண்ணில் ஒரு சில சிவாலயங்களே உள்ளது. ஞானவைரவர், நரசிம்ம வைரவர், காலபைரவர், வடுகவைரவர், ஆதிவைரவர் என்ற பெயர்களில் பைரவர் பரவலாக வழிபடப்படுகிறார்.

திருக்கேதீச்சர ஆலயம் பற்றிய தேவார பதிகத்தில் "செத்தாரெலும் பணிவான்திரு கேதீச்சரத்தானே" என்றே சுந்தரர் பாடுகிறார். எனவே திருக்கேதீச்சர ஆலயமும் கிறிஸ்தவர்களால் அழிக்கப்படுவதற்கு முன்பு மண்டை ஓட்டு மாலையை அணிந்து நின்று அருள்புரியும் பைரவரின் ஆலயமாகத்தான் இருந்துள்ளது.

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் புத்தளம் முன்னேச்சரத்திலும் பலிகொடுத்து வழிபடும் பைரவ வழிபாட்டுத் தொடர்ச்சி காணப்படுகிறது. எனவே அதுவும் பைரவ வழிபாட்டு தலமாகவே இருந்திருக்க வேண்டும்.

இலங்கையில் செல்வாக்கு பெற்றிருக்கும் பைரவ வழிபாடு தமிழகத்தில் செல்வாக்கு பெற்றிராத போதும், ஆந்திர மாநிலத்தில் மிகவும் செல்வாக்கு பெற்றிருக்கிறது.


உள்ளிருந்து, வெளியே இருந்து என்று பல்வேறு வகையான தாக்குதல்களை சந்தித்தாலும் பைரவ சமயம் இன்றும் தன் சிறப்பான பாரம்பரிய தொடர்ச்சியை பாதுகாக்கிறது என்றே சொல்ல வேண்டும். 

யாழ் மாவட்டத்தில் உள்ள கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் பைரவ சமயத்தின் பாரம்பரிய சிறப்புவாய்ந்த ஒரு ஆலயமாகும். 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -12




சித்தாந்த சைவம் வேறு சித்த சைவம் வேறு

 மெய்கண்ட சாத்திரங்கள் அல்லது சித்தாந்த சாத்திரங்கள் என்பது 14 நூல்களாகும். இவற்றை பின்பற்றும் வழிமுறையே சித்தாந்த சைவம் எனப்படும். 

திருவுந்தியார்

திருக்களிற்றுப்படியார்.

சிவஞானபோதம்

சிவஞான சித்தியார்.

இருபா இருபது

உண்மை விளக்கம்

சிவப்பிரகாசம் 

திருவருட்பயன்

வினா வெண்பா

போற்றிப் பஃறொடை

கொடிக்கவி

நெஞ்சுவிடு தூது

உண்மை நெறி விளக்கம்

சங்கற்ப நிராகரணம்

இவையே அந்த பதிநான்கு சித்தாந்த நூல்கள். இவற்றுள் மெய்கண்ட தேவர் எழுதிய சிவஞானபோதமே முதன்மையான, முழுமையான நூலாகும். இந்த மெய்கண்ட சாத்திரங்கள் கூறும் தத்துவங்களின் அடிப்படையில் பின்பற்றப்படும் வழிமுறையே சித்தாந்த சைவம் எனப்படும்.

சித்த சைவம் என்பது நாத சைவத்தை குறிக்கும் பெயராகும். சித்தர்களின் வழியாக அவர்களின் சிந்தனைகளின் வழியாக பின்பற்றப்படும் வழிமுறை என்பதால் நாதசைவமானது சித்த சைவம் என்றும் அழைக்கப்படும்.

சித்த சைவத்திற்கு என்று வரையறையோ, முடிவான தர்க்க முடிவுகளோ எதுவும் கிடையாது. ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான அணுகுமுறையை பின்பற்றி உள்ளனர். சித்த சைவம் எனப்படும் நாத சைவத்தின் பிறப்பிடம் மராத்தியப் பகுதியாகும்.

பதினெட்டு சித்தர்கள் என்று கூறுவார்கள். அந்த பதினெட்டு சித்தர்கள் யார் என்பதுகூட வரையறுக்கப்பட்ட ஒன்று கிடையாது. பலர் பலவாறு பதினெண் சித்தர்களின் பெயர்களை கூறியுள்ளனர்.

இந்த பதினெட்டு சித்தர்களில் பல்வேறு இனங்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சித்தர்களாக குறிப்பிடப்படுகிறார்கள். 

இங்கே பலர் சித்தர்களின் வழிமுறையை பின்பற்றுபவர்கள் சித்தாந்த சைவர்கள் என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சித்தர் பாடல்கள் தான் சித்தாந்த தத்துவத்தை விளக்குகிறது என்று தவறாக நம்பிக்கொண்டுள்ளார்கள்.

சித்தர்களில் ஒருவர் கூட சித்தாந்த மரபினர் இல்லை. சித்தர்கள் என்போர் நாதசைவ மரபினர்.

சித்த சைவம், சித்தாந்த சைவம் இரண்டினதும் வேறுபாட்டை அறிந்து கொள்வோம்.

சித்தாந்த சைவத்தை பின்பற்ற விரும்புபவர்கள் சிவஞான போதம் கூறும் தத்துவ நிலைகளை உணர்ந்து அதன்வழியில் சைவத்தை பின்பற்ற வேண்டும். 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -11



நாங்கள் இந்துக்களா? சைவர்களா?

நிச்சயமாக நாம் அனைவரும் இந்துக்கள்தான். இந்து என்பது எமது பாரம்பரிய வாழ்வியலை குறிக்கும் பெயர். 

நாம் அனைவரும் ஒருகாலத்தில் வனங்களிலும், மலைகளிலும், ஆற்றங்கரைகளிலும் வேட்டையாடி அலைந்து பின் விவசாயம் கைத்தொழில் என்று நாகரீகமடைந்த ஆதிக்குடிகளின் தொடர்ச்சிகளே..

ஆம், நாம் பழங்குடி மக்களின் சந்ததிகளே, இதில் வெட்கப்படவோ, அவமானப்படவோ எதுவுமே கிடையாது. இங்கு யாரும் வேற்றுக் கிரகங்களில் இருந்தோ, அல்லது யாரோ ஒருவர் வந்து ஜீபூம்பா சொல்லியோ யாரையும் படைக்கவில்லை.

இந்து வாழ்வியல் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எமது மூதாதையர்களின் வாழ்வியல், பாரம்பரிய கூறுகளை சிதைக்காமல், காலமாற்றத்திகு ஏற்ப அவற்றை வழிவழியாக கடத்தும், ஒரு அழகான வாழ்வியல் முறை. 

உலகத்தில் அழிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் ஒரேயொரு பாரம்பரிய வாழ்வியல் முறை இந்து வாழ்வியல் மட்டுமே. 

இதை இப்படியும் சொல்லலாம், உலகத்தில் அழிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் பாரம்பரிய வாழ்வியல் முறையே இந்து என்று.

இந்து என்பது வாழ்வியல், சைவம் என்பது தத்துவ கோட்பாடு.

சைவம், ஸ்மாரத்தம், வைணவம், பௌத்தம் என்பவை எல்லாம் கோட்பாட்டு புரிதல் வேறுபாடுகள், சடங்கு சம்பிரதாய வேறுபாட்டு குழுமங்கள்.

சைவ சித்தாந்த கோட்பாடுகளை அதன் உண்மை விசாரணைகளை ஏற்றுக் கொண்டாலும், யாரும் தமது பாரம்பரிய வழிமுறைகள், குலதெய்வ வழிபாடுகள் என்பவற்றை கைவிடவில்லை.

காலனித்துவ காலத்தில் நிர்ப்பந்த மதமாற்றம் செய்யப்பட்டு, தமது பாரம்பரியத்தை, குலதெய்வ வழிபாட்டை தொலைத்தவர்கள் இருக்கிறார்களே தவிர யாரும் வேண்டுமென்றே தவிர்க்கவில்லை.

இன்று குலதெய்வம் தெரியாது என்பவர்கள் காலனித்துவ காலத்தில் நிர்ப்பந்த மதமாற்றம் செய்யப்பட்டு மீண்டும் பாரம்பரிய அடையாளத்திற்கு திரும்பியவர்களாக இருப்பார்கள்.

பலரும் சிவலிங்கத்தை, சிவனை கடவுள் என்று வழிபட்டால் அவர்கள் தங்களை சைவர்கள் என்று நினைக்கிறார்கள். நீங்கள் சிவன் என்ற பெயரில் கடவுளை வழிபடுவதால் சைவர்களாக முடியாது. சைவ சித்தாந்த தத்துவங்கள் கடவுள் என்பதை எதுவாக வரையறுக்கிறதோ அதை உணர்ந்து நின்று பின்பற்றுபவர்கள் மட்டுமே சைவர்கள். சைவ சித்தாந்தம் கூறும் கடவுளின் ஒரு குணமே சிவமாகும். 

நாம் அனைவரும் இந்து வாழ்வியலில் இந்துக்களாக வாழ்ந்துகொண்டு தான் சைவ சித்தாந்த தத்துவங்களையும், அதன் கடவுள் கோட்பாடுகளையும் பின்பற்றுகிறோம். ஒரு கோட்பாட்டை பின்பற்றுவதற்காக ஒருவன் தன் பாரம்பரியத்தை இழக்க வேண்டும் என்று என்ன அவசியம் வந்தது.

பாரம்பரிய அடையாளங்களை சிதைத்து அழிப்பது என்பது பாலைவனத்தில் தோன்றிய வறட்டு சிந்தனைகள் எம்மிடையே விட்டுச் சென்ற எச்சங்கள். அன்னிய ஆக்கிரமிப்பு காலத்தில் மதம்மாறிச் சென்று தமது பாரம்பரியத்தை, குலதெய்வ வழிபாட்டை தொலைத்தவர்கள் சிலர் நாங்கள் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்று மக்களை குழப்புகிறார்கள். அவர்கள் வாலறுந்த நரிகள்.

தாங்கள் தொலைத்த பாரம்பரிய தொடர்பை இன்னொருவர் பேணுவது அவர்களால் சகிக்க முடியவில்லை. பாலைவனத்தில் தோன்றிய வறண்ட சிந்தனைகளின் தாக்கத்தில் அவர்கள் வம்சமும் சிலகாலம் இருந்துள்ளது அல்லவா.? அதன் பாதிப்புகள் இன்றும் தொடர்கிறது.

நான் சைவசித்தாந்த தத்துவங்களை ஏற்றவன். என் இந்து பாரம்பரியத்தில் வாழ்பவன். இங்கே இந்துக்கள் என்று சொல்பவர்கள் அனைவரும் அவ்வாறுதான் வாழ்கிறார்கள். தத்துவங்களை ஏற்றதற்காக வாழ்வியல் அடையாளங்களை தொலைக்காமல் வாழ்பவர்களே இந்துக்கள்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -10





Saturday, May 20, 2023

ஸ்மார்த்தம் சைவ சித்தாந்தம் வேறுபட்ட கோட்பாடுகளா?

ஸ்மார்த்தம் என்பது ஆதிசங்கரர் உருவாக்கிய தத்துவ வழிமுறைகளை பின்பற்றும் ஒரு பிரிவினராவர். 

ஆன்மா கடவுளுடன் இரண்டறக் கலந்து நிற்கக்கூடியது. அதற்கு தடையாக இருப்பது மாயையே என்பது ஸ்மார்த்த கோட்பாடாகும். மாயை என்றால் மாறக்கூடியது என்று புரிந்து கொள்ளலாம். மாற்றத்திற்கு உட்படக் கூடியது எல்லாம் மாயையே. 

எமது உடல், உலகம், அண்டம் என்று நாம் காணும் அனைத்தும், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது. அவை அனைத்துமே மாயை. 

ஒன்று பலவாறாக தோன்றுவது மாயை. ஆன்மா மாறாதது. அதுதான் உண்மை. மாறாத ஆன்மாவை மாறும் இந்த மாயையே பற்றி நிற்கிறது. இந்த மாயையில் இருந்து ஆன்மா விடுபட்டால் அங்கே ஆன்மாவுடன் எஞ்சி நிற்பது கடவுள் என்றும் இருப்பு மட்டுமே. 

இந்த மாறும் மாயையை கடந்துவிட்டால் அங்கே கடவுள், ஆன்மா என்ற இரண்டு மட்டுமே எஞ்சியிருக்கும். 

மாயை இல்லை என்றால் ஆன்மாவிற்கும் ஒரு வரையறை இல்லாமல் போய்விடும். 

வரையறை இல்லாத கடவுளுடன் வரையறை இல்லாத ஆன்மா எல்லையில்லாமல் கலந்து நிற்கும். இந்த நிலையில் கடவுள், ஆன்மா இரண்டும் பிரித்தறிய முடியாத வகையில் இரண்டறக் கலந்து நிற்கும்.

இதுதான் அத்வைதம். இதுதான் ஸ்மார்த்த கோட்பாடு.

சரி, 

சைவம் என்ன சொல்கிறது? 

சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது?

சைவ சித்தாந்தமும் அதே அத்வைதம் பற்றியே பேசுகிறது. மாயை நீங்கும் போது ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலந்து நிற்கும் என்றே கூறுகிறது.

சைவ சித்தாந்தம், ஸ்மார்த்தம் இரண்டும் ஒரே கோட்பாடுகளை உடையவை. அவை இரண்டும் வேறுபட்டவை என்று பிரிவினை பேசுபவர்கள் அதற்கான காரணங்கள் எதையும் முன்வைப்பதில்லை.

இங்கே இரண்டு பிரிவிலும் ஆதிக்கம் செலுத்தும் சாதிகளும், சடங்கு சம்பிரதாய பின்பற்றுதல்களும் வேறுபட்டு நிற்கலாம். ஆனால் தத்துவார்த்த அடிப்படையில் சைவ சித்தாந்தம், ஸ்மார்த்தம் இரண்டுமே ஒன்றுதான்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -9



புத்தரும் ஆணவமும்

ஆணவம் என்றால் உங்கள் மனதில் உடனே தோன்றுவது என்ன?

திமிர்

செருக்கு

தற்பெருமை

மூர்க்கமான அணுகுமுறை

சொல்கேளாமை

இப்படி ஏதாவது ஒன்று உங்களுக்கு தோன்றியிருக்கலாம். 

உண்மையில் இந்து ஆன்மீக தத்துவத்தில் ஆணவம் என்று சொல்லப்படுவது அதுவல்ல, நாம் மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஆணவத்தின் வெளிப்பாடுகளேயன்றி அவை ஆணவமல்ல.

ஆணவம் என்றால் செயல்கள் மீதான விருப்பம் என்பதாகும். உயிர்கள் அனைத்தும் செயல்களாலும் செயல்கள் மீதான விருப்பங்களாலுமே துன்பப்படுகின்றன. இந்த விடயத்தை மக்கள் புரிந்து கொள்ள இலகுவாக "ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம்" என்று புத்தர் போதித்தார்.

ஆசை என்பது செயல்கள் மீதான விருப்பம். அதுதான் ஆணவம்.

புத்தர் ஆணவமே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று போதித்திருந்தால் அது பலராலும் புரியப்படாமல் போயிருக்கலாம்.

இந்து ஆன்மீகமானது,

கடவுள்

ஆன்மா

ஆணவம் 

கர்மம்

மாயை என்ற ஐந்தினைப்பற்றிப் பேசுகிறது. 

கடவுள், ஆன்மா என்ற இரண்டினைப் பற்றியே வேதாந்த, சித்தாந்த தத்துவங்கள் அதிகமாக பேசுகின்றன.

ஆனால், 

புத்தர் ஆணவம் என்பதைப் பற்றி பேசினார்.

கிருஷ்ணர் கர்மத்தை பற்றி பேசினார்.

ஆதிசங்கரர் மாயையை பற்றிப் பேசினார்.

கடவுள் ஆன்மா பற்றி மட்டுமல்லாமல் ஆணவம், கர்மம், மாயை என்னும் ஏனைய பொருட்கள் பற்றி பேசியவர்களும் மகான்களாக, வழிகாட்டிகளாக, அவதார புருஷர்களாக போற்றி நிற்பதே இந்து தர்மத்தின் அழகு.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -8



Wednesday, May 17, 2023

நால் வர்ணம் நல்வர்ணம்

நான்கு வர்ணங்களை படைத்ததாக கிருஷ்ணன் சொல்கிறானா?

‘சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச‌:’

இந்த ஒற்றை கீதை வரியை வைத்துக் கொண்டு ஆளாளுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள். கிருஷ்ணன் நான்கு வர்ணங்களை நானே படைத்தேன் என்கிறான். அவன்தான் சாதிய ஏற்றத்தாழ்வுக்கு காரணம் என்கிறார்கள்.

இந்துக்களிடம் சாதிகள் கிடையாது. வர்ணம் மட்டுமே உள்ளது. உலகில் வர்ணம் இல்லாத இடம் என்று எதுவுமே கிடையாது. நிற்க,

சரி, கடவுள் படைத்தார் என்றால் எல்லாவற்றிற்கும் கடவுள்தான் காரணமாக இருக்க முடியும். நால்வர்ண பாகுபாட்டையோ, சாதிய பாகுபாட்டையோ கடவுள் இல்லாத இன்னொருவர் வந்து படைத்திருக்க முடியாது இல்லையா? 

கிருஷ்ணன் சொல்கிறான், 

"நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன். இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் நான் அவதாரம் செய்கிறேன்" அவன் பரமாத்மாவாக பேசுகிறான். கடவுளாகவோ, கிருஷ்ணன் என்ற மனிதனாகவோ அந்த வசனத்தை பேசவில்லை. நாம் இருக்கும் பிரபஞ்சம் போன்று பலகோடி பிரபஞ்சங்கள் சேர்ந்தது பரம். அந்த பரத்தின் ஆன்மா பரமான்மா. ஆன்மா என்பது மாயையைச் சார்ந்தது. கடவுள் மாயையை சாராதது. ஆன்மா பிறப்பு இறப்பு அழிவற்றது. ஆனால் அது சார்ந்த மாயை அந்த நிலைகளுக்கு உட்பட்டது.

கிருஷ்ணன் பரமாத்மாவாகவே பேசுகிறான். மாயை என்பது ஒரு சக்திநிலை மாற்றம். அதனால்தான் இந்த பிரபஞ்சத்தின் அனைத்தும் மாயா சக்தியின் தோற்றம் என்று சொல்கிறான். உலகத்தில் உள்ள அனைத்து வேறுபாடுகளும் மாயையின் வெளிப்பாடுகளே.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த கீதை வசனம் நால்வர்ணம் பற்றியா பேசுகிறது என்று பார்ப்போம், 

இந்த வசனத்தில் சாதுர்வர்ண்யம் என்றுதான் உள்ளது. சதுர்வர்ணம் என்று வரவில்லை, சதுர் வர்ணத்தைத்தான் சாதுர்வர்ண்யம் என்று கிருஷ்ணன் மாற்றி கூறினானா? இல்லை மாற்றி வியாசர் எழுதிவிட்டாரா?

சாதுர்வர்ண்யம் என்றால் நல் வர்ணத்தை என்று பொருள். சாது என்றால் நல்லவர் என்று பொருள். 

"பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்" என்று சொல்லி ஒரு வசனம் வருகிறது. பரித்ராணாய ஸாதூனாம் என்றால் நல்லவர்களை காப்பதற்கும் என்று பொருள். ஆக சாதுர் வர்ண்யம் என்பது நான்கு வர்ணங்கள் என்பது தவறு. நல் வர்ணங்களை என்பதே சரி. 

வர்ணங்கள் நான்கு என்றால், நல் வர்ணங்களை கிருஷ்ணன் தானே படைத்ததாக கூறுகிறான் என்றால் நான்கு வர்ணங்களும் நல் வர்ணங்கள் என்றுதானே அர்த்தம். வர்ணங்களைக் கடந்த ஒரு மாக்கள் கூட்டம் எல்லாக் காலங்களிலும் இருக்கிறது தானே.

படைத்தல் என்பது கிருஷ்ணனின் தொழிலல்ல, காத்தலே அவன் தொழில். இந்த உலகை மக்களைக் காப்பதற்கான நல்ல மக்களை நானே படைத்தேன் என்பதே அவன் சொல்வதன் பொருள்.

பிரம்மன் நல்லவர்கள் தீயவர்கள் என்று எல்லோரையும் படைக்கிறான். தீயவர்களுக்கும் எல்லாம் கிடைக்க வழிசெய்கிறான். கிருஷ்ணன் அவ்வாறு இல்லை, அவன் நல்லவர்களுக்கு மட்டுமே கொடுக்கிறான். நல்லவர்களை மட்டுமே காக்கிறான். தீயவர்களிடத்தே கிருஷ்ணன் சங்கரனாக மாறிவிடுகிறான். 

பிரம்மன் இந்துக்களால் கொண்டாடப்படாமல் போனதற்கும் கிருஷ்ணன் கொண்டாடப்படுவதற்கும் இதுவும் ஒரு காரணம்.

#சர்வம்_சிவமயம்

#ஆன்மீகம்_அறிவோம் -7



Monday, May 15, 2023

மனம்

மனத்தை உடையவர்கள் மனிதர்கள் என்கிறார்கள் எம் முன்னோர்கள். 

மனம் என்றால் என்ன?

எம்மை சூழ உள்ள சமூகத்தின் மீது எமக்கு உண்டாகும் பிரதிபலிப்பே மனம் எனப்படுகிறது.

நாம் எம் சமூக சூழலில் இருந்து கேட்டு, பார்த்து அறிந்தவைகளில் இருந்து உலகம் தொடர்பான எண்ணங்களை, சந்தேகங்களை வடிவமைத்துக் கொள்கிறோம். இவ்வாறு எம்மால் வடிவமைக்கப்பட்ட எண்ணங்கள் சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்ட சமூக பிரதிபலிப்பே மனமாகும்.

ஒவ்வொரு மனிதர்களும் தனித்தனியாக கல்வி கேள்விகளை உடையவர்கள் ஆதலால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வடிவத்தில் மனம் இருக்கும். ஆனாலும் சமூக குழுக்கள் ஒவ்வொன்றும் சில பொதுவான வாய்ப்புக்களை உடையவை என்பதால் சில பொதுவான சமூக மனப்பான்மையும் காணப்படும்.

எம் ஆன்மீகம் கூறும் அந்தகரணங்கள் நான்கில் மனமும் ஒன்று. மற்றைய மூன்று புத்தி, சித்தம், அகங்காரம்.

ஒன்றைப் பற்றிய சிந்தனையோ, சந்தேகமோ ஒருவனுக்கு உண்டாகவில்லை என்றால் அவன் மனிதனில்லை. ஏதோ ஒன்றை சந்தேகப்படாமல் கேள்வி கேட்காமல் நம்பும் கூட்டம் மக்களல்ல விலங்குகள் என்கிறார்கள் இந்து வாழ்வியலை பின்பற்றிய எம் முன்னோர்கள்.

அதனால்தான் மதங்கள் மனிதர்களை விலங்குகளாக மாற்றுகிறது என்கிறார்கள் அவர்கள். மதம் என்றால் கேள்வி கேட்க முடியாத நம்பிக்கை என்பதாகும்.

மனத்தை நீக்குதலே ஞானம் என்று ஆன்மீகம் கூறும். ஆனால் அதே ஆன்மீகம் மனம் என்ற ஒன்று இருப்பதையே அறியாமல் வாழ்பவர்கள்களை விலங்குகள் விலங்குகள் என்கிறது.

நாம் எந்த நிலையில் இருக்கிறோம்..
விலங்குகள்?
மனிதர்கள்?

புத்தர்
சித்தர்
அகங்காரகர் என்போர் யார் என்று இன்னொரு பதிவில்..

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -6



கீதையின் முக்கியத்துவம்

கீதையின்_முக்கியத்துவம் என்ன? சைவ சித்தாந்த தத்துவத்தின் எதிர்நிலையா கீதை..?

இந்துக்களிடம் பலலட்சம் ஆன்மீக நூல்கள் உள்ளன. பலநூறு தத்துவங்கள், கோட்பாடுகள் உள்ளன. 

அவைகள் எல்லாவற்றையும் விட ஏன் கீதையை பலரும் முக்கியமான நூலாக போற்றுகிறார்கள் என்று என்றேனும் சிந்தித்திருக்கிறீர்களா?

ஏனென்றால், எல்லா நூல்களும் உலக வாழ்வில் இருந்து விடுபடுவதைப் பற்றியும், கர்மங்களில் இருந்து விடுபடுவதைப் பற்றியும் பேசுகிறது. கீதை வாழ்வதற்கான வழிமுறையைப் பற்றி பேசுகிறது. செயல்களை செய்வதைப்பற்றி பேசுகிறது.

இந்து வாழ்வியல் மரபில் எழுந்த எல்லா சிந்தனைகளும் கர்மங்களில் இருந்து விடுபடுவதைப் பற்றியே பேசுகிறது.

ஒரு உயிர் கர்மங்களில் இருந்து விடுபடுவதே பிறவிப் பெருங்கடலை கடக்கும் வழிமுறை என்று பேசுகின்றது. 

சித்தாந்த நூல்களாக இருக்கலாம், வேதாந்த நூல்களான இருக்கலாம் அவை எல்லாம் கர்மங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றும், கர்மங்களில் இருந்து விடுபடும் உயிர்கள் முக்தி இன்பத்தை அடையும் என்றும் வலியுறுத்துகிறது.

ஒரு நாட்டில் இருக்கும் அனைவரும் தமக்கு கர்ம பலன் உண்டாகிவிடும் என்பதற்காக எந்த செயல்களையும் செய்யாமல் இருந்தால் எப்படி இருக்கும். ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள்.

யாரும் திருமணம் செய்யவில்லை. யாரும் விவசாயம் செய்யவில்லை. யாரும் எந்த ஒரு தொழிலுக்கும் செல்லவில்லை. அது நாடாக இருக்குமா? யார் யாருக்கு உணவு கொடுப்பது? அடுத்த தலைமுறை எப்படி உருவாகும்? 

இவ்வாறான ஒரு காலம் ஒரு காலத்தில் இருந்தது. நான் முக்தி அடையப் போகிறேன். நான் கர்மங்களில் இருந்து விடுபடப் போகிறேன் என்று ஒரு பெருங் கூட்டமே எந்த வேலையும் செய்யாமல் அலைந்தார்கள்.

துறவு என்பதைப் பலரும் தவறாக புரிந்து கொண்டிருந்தார்கள். கர்மங்களில் இருந்து விடுபடுதல் என்பதைத் தவறாக புரிந்து கொண்டிருந்தார்கள்.

அவ்வாறான நிலையில் உலகத்தின் தொடர்ச்சியான இயக்கத்தைப் பேணுவதற்காக, துறவு என்றால் என்ன, கர்மங்களில் இருந்து விடுபடுதல் என்றால் என்ன என்பதை விளக்குவதற்காக எழுந்த நூலே கீதை.

இல்லறத்தை விட்டு நீக்குதல் துறவு அல்ல, செயல்கள் அனைத்தும் கர்மங்கள் அல்ல, உலகத்தில் எந்த ஒரு செயலும் சரியோ தவறோ கிடையாது. தர்மம் வேறு கர்மம் வேறு. தர்மம் கர்மத்தில் சேராது என்று மக்களிடையே இருந்த பல்வேறு மயக்கங்களை கீதை போக்குகிறது.

அதுதான் கீதையின் சிறப்பிற்கு காரணம். சித்தாந்த நூல்கள் கர்மத்தை பற்றி பேசுகிறது. கீதை எது கர்மம் எது தர்மம் என்பதை பற்றி பேசுகிறது. 

ஒருவகையில் பார்த்தால் சித்தாந்த தத்துவத்தின் தொடர்ச்சியே கீதை என்று சொல்லலாம்.

சர்வம் சிவமயம்

#ஆன்மீகம்_அறிவோம் -5




Thursday, May 4, 2023

மதம் சமயம் ஆன்மீகம் வேறுபாடு என்ன?

நீங்கள் பின்பற்றுவது மதமா? சமயமா? ஆன்மீகமா?

#மதம் என்றால் நம்பிக்கை என்று பொருள். ஆம், அந்த சமஸ்கிருத மொழிச் சொல்லின் பொருள் அதுதான்.

நம்பிக்கை என்பது அறிவிற்குள் அடங்காதது. உண்மையில் அறிவு இருந்தால் அங்கு நம்பிக்கை என்பதே இல்லாமல் போய்விடுகிறது. நம்பிக்கையில் மூடநம்பிக்கை, அறிவான நம்பிக்கை என்று வித்தியாசம் கிடையாது. ஒரு வகையில் பார்த்தால் நம்பிக்கை என்பதே மூடத்தனம் மட்டும்தான்.

நீங்கள் யாரோ ஒருவரை பின்பற்றுகிறீர்கள், யாரோ ஒருவர் சொன்னதைப் பின்பற்றுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது என்ன? நம்பிக்கை தானே? அவ்வாறு யாரோ ஒருவரை, யாரோ ஒருவரின் கோட்பாட்டை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் அது ஒரு மதமாகும். 

பொதுவாக மதங்கள் சில அடிப்படைகளைக் கொண்டிருக்கும். தனி மனிதர், அல்லது அவர் சொன்ன வார்த்தைகளை முழுமையாக நம்புவார்கள். அதனை கேள்வி கேட்க இடமளிக்காமல், மாற்றுவதற்கு இடமளிக்காமல் பேசுவார்கள். உண்மையில் கேள்வி கேட்காமல், கேள்வி கேட்க முடியாமல் ஒரு நம்பிக்கை பின்பற்றப்படும் என்றால் அதுதான் உண்மையான மூடநம்பிக்கை.

ஈவேரா சொன்னதை நம்பினால், அல்லது ஈவேராவை நம்பினால் அது ஒரு மதமாகும். உலகில் தனி மனிதர்கள் உருவாக்கிய, தனி மனித வழிகாட்டலை பின்பற்றும் மதங்களே எண்ணிக்கையில் அதிகமாக ஆக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மதங்களில் சுய சிந்தனைக்கோ அறிவுக்கோ இடமிருக்காது. யாரும் சுயமாக சிந்திப்பதை அவை அனுமதிப்பதும் இல்லை.

ஆனால் அறிவோ சுய சிந்தனையோ இல்லாத பலருக்கு அது வசதியாகவும் போய்விடுகிறது. அந்த சமூகத்தில் பிறந்தவர்கள் வளரும் காலத்திலேயே சுயமாக சிந்திக்க முடியாதவாறு மூளைச்சலவை செய்யப்பட்டு அறிவற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். தாம் நம்பிய அந்த நம்பிக்கை மட்டுமே சரியானது, ஏனைய நம்பிக்கைகள் அனைத்தும் அழிக்கப்படவேண்டும் என்று மதம் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இங்கே மதம் என்பது வேறு ஒரு பரிமாணத்தை அடைகிறது. செறிவூட்டப்பட்ட நம்பிக்கை வெறியாக மாறுகிறது. அதனால்தான் நம்பிக்கை, வெறி இரண்டு சொற்களும் மதம் என்ற சொல்லினால் குறிக்கப்படுகிறது.

ஆனால் இந்து வாழ்வியல் என்பது தனிநபரையோ, தனிமனித கோட்பாடுகளையோ நம்புவது கிடையாது. இந்துக்களிடம் மரபுவழியான சிலபல சடங்கு சம்பிரதாய பின்பற்றுதல்கள் உள்ளனவேயன்றி அவைகூட மதமாக இல்லை.

இந்த நபரையோ, இந்த நபர் கூறியதையோ கட்டாயம் நம்பவேண்டும் என்ற மூடத்தனம் இந்துக்களிடம் கிடையாது. அறியப்படாத விடயங்கள் ஆராய்வதற்கு உரியனவேயன்றி நம்புவதற்கு உரியவை அல்ல என்பது இந்துக்களின் மரபு. கடவுள், உயிர் அதனைப் பற்றி நிற்கும் தளைகள் என்று அறியப்படாத விடயங்களைப் பற்றி ஆராய்வதே இந்துக்களின் மரபாக இருந்தது. 
இருக்கிறது. 
இனியும் இருக்கும்.

இதுவரையில் அறியப்படாத கடவுள் பற்றியும் ஆன்மாவை பற்றியும் பல்லாயிரம் ஆராய்ச்சிகள் இந்து சமூகத்தில் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு ஆராய்ச்சிகள் மூலம் பெறப்பட்ட முடிவுகள் அன்றைய சமூக பொருளாதார அரசியல் நிலைப்பாடுகளுக்கு அமைய மக்களால் ஏற்றுக் கொள்ளும் வகையில் சமயங்களாக வெளிப்படுத்தப்பட்டன. 

சமைத்தல் என்றால் நுகர்வதற்கு ஏற்றாற்போல் மாற்றுவதாகும். அரிசியை அவ்வாறே உண்ண முடியாது என்பதால் அதை உண்பதற்கு ஏற்றவாறு மாற்றும் செயற்பாடே சோறு சமைத்தல். அதுபோல ஆன்மாவை கடவுளைப் பற்றிய ஆராய்ச்சி முடிவை நேரடியாக மக்களுக்கு கொடுத்தால் அவை மக்கள் பலரால் புரிந்து கொள்ள முடியாது போகும். ஆராய்ச்சி முடிவுகளை மக்கள் புரிந்து கொள்ள ஏற்றாற்போல் மாற்றி வழங்கும் முறையே சமயமானது.

இந்த சமய வழிமுறை கூறும் ஆராய்ச்சி முடிவுகளை நாம் நேரடியாக ஆராய்ந்து அனுபவித்து உணர்வதே ஆன்மீகம் என்ப்படுகிறது. 

இதுதான் மதம், சமயம், ஆன்மீகம் என்பவற்றுக்கான அடிப்படை வேறுபாடு.

நீங்கள் பின்பற்றுவது மதமா? சமயமா? ஆன்மீக வழிமுறையா என்பதை பின்னூட்டத்தில் இடுங்கள்.

#சர்வம்_சிவமயம்

#ஆன்மீகம்_அறிவோம்-4



எத்தனை கடவுள்கள் உள்ளனர்?

மதத்திற்கு ஒரு கடவுள்
இனத்திற்கு ஒரு கடவுள்
மொழிக்கு ஒரு கடவுள் என்று பல்வேறு கடவுள்கள் உள்ளதா?

அல்லது 
பெரிய கடவுள்
சிறிய கடவுள் என்று வேறுபாடுடைய கடவுள்கள் உள்ளதா?

தமிழர்களின் மரபு என்ன, எம் முன்னோர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள்?

நிச்சயமாக கடவுள் என்பது ஓர் இருப்பு நிலைதான். உனது எனது என்ற பேதங்கள் அங்கு கிடையாது. மதத்திற்கான, மொழிக்கான, தேசத்திற்கான என்ற வேறுபாடுகள் கடவுள் என்ற இருப்பு நிலைக்கு கிடையாது. 

கடவுள் நபரல்ல,

கடவுள் பிறப்பதோ இறப்பதோ இல்லை, அதனால்தான் பிறவா யாக்கை பெரியோன் என்று சங்க இலக்கியங்களில் எம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கடவுள் என்ற இருப்பு நிலைக்குள்தான் நாம், நம் பூமி, நம் பிரபஞ்சம் என்று அனைத்தும் இருப்பதால் கடவுளுக்கும் எமக்கும் இடையே எந்த தொடர்பாளர்களும் தேவையில்லை. கடவுளுக்கு என்று தனியாக எந்தவொரு தூதரும் தேவையில்லை. ஒரு பிறவி எடுத்துத்தான், ஒரு தூதனை அனுப்பித்தான் மக்களுக்கு ஏதோ ஒன்றைச் சொல்ல முடியும் என்ற இயலாமை ஒருபோதும் கடவுளுக்கு இருக்க முடியாது. 

சர்வ வல்லமை உள்ள கடவுளுக்கு ஒவ்வொரு உயிர்களுடனும் தொடர்பு படும் வல்லமை இல்லாமல் போகுமா? மனிதனாக பிறந்தோ, தூதர்களை அனுப்பியோதான் தொடர்பு கொள்ள வேண்டுமா?

அதனால்தான் எம் முன்னோர்கள் எல்லாவற்றையும் எல்லோருக்கும் வழங்குபவர் கடவுள் என்று கூறினர். சர்வேஸ்வரன் என்பதன் பொருள் அதுவே.

இறைவனுக்கு பிறப்பு இறப்பு கிடையாது. இரத்தம், சதை, சலம், மலம் என்று தேங்கி நிற்கும் மாயா உடலை சாராமல் அப்பழுக்கில்லாத செம்மையுடன் இருப்பதே இறைவனின் இயல்பு. அதனால்தான் இறைவனை சிவம் என்றார்கள். சிவம் என்றால் செம்மையான, தூய உருவினை உடைய என்று பொருள்.

இறைவன் தூய உருவினை உடையவர் என்பதை யாராலும் மறுக்க முடியுமா?

இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் சர்வ வியாபி என்பதை யாராலும் மறுக்க முடியுமா?

அதனால்தான் பிறப்பு இறப்பு இல்லாமல், படைத்தல் காத்தல் அழித்தல் என்று செயல்களை சாராமல் எல்லோருக்கும் எல்லாவற்றையும் அளிக்கும் சிவமே ஒரே கடவுள் என்று எம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சர்வம் சிவமயம்

#ஆன்மீகம்_அறிவோம்-3



கடவுள் செயல்களுக்கு காரணம் இல்லையா?

 #ஆன்மீகம்_அறிவோம்-2

செயல்கள் அனைத்தும் விருப்பு வெறுப்பு எனும் நிலைகளில் இருந்தே செய்யப்படுகிறது. விருப்பு வெறுப்பைக் கடந்துவிட்டாலே செயல்கள் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.

 உயர்ந்த நிலையை அடைந்த மனிதர்களே விருப்பு வெறுப்பைக் கடந்து விடுகிறார்கள். அவ்வாறு இருக்கையில் கடவுள் விருப்பு வெறுப்புள்ள ஒரு அற்பமான நபராக இருக்க முடியாது. அதனால் கடவுள் என்பவர் விருப்பு வெறுப்பு என்பவை உடையவனாக இருக்க முடியாது.

ஒரு செயல் நடைபெறுவதற்கு மூன்று விடயங்கள் தேவை
1. செயலைச் செய்வதற்கான அறிவு
2. செயலுக்காக மூலப் பொருட்கள்
3. செய்யும் நபர்

உயிர்களே செயல்கள் அனைத்தையும் செய்கின்றன. 

செயல்களுக்கான மூலப் பொருட்கள் மாயையில் இருந்து தோன்றுகிறது.

உயிர்கள் செயல்களை ஆற்றுவதற்கான அறிவையும், ஆற்றல் இருப்பையும் இறைவனிடம் இருந்து பெறுகின்றன.

இறைவனின் இருப்பில் இருந்து ஒரு உயிர் தன் செயல்களுக்கான அறிவைப் பெறும் என்றால் அது சித்தம் எனப்படும்.

மாயை சார்ந்து உயிர்கள் அந்த அறிவைப் பெறும் என்றால் அது புத்தி என்றும் கூறுவர்.

அதனால்தான் கடவுள் செய்பவன் அல்ல, செயற்காரணன் என்று சைவ தத்துவங்கள் கூறுகின்றது.

செய்பவை- உயிர்கள்
மூலகாரணம்- மாயை
நிமித்த காரணம்- கடவுள் என்கிறது சித்தாந்தம்.

இறைவன், உயிர்கள், மாயாமலங்கள் மூன்றும் அனாதியானவை என்பது சைவத்தின் அடிப்படை. அதுவே முப்பொருள் உண்மை என்று கூறப்படுகிறது.

சர்வம் சிவமயம்





கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...